யானையின் அடியில் சிக்கிக்கொண்ட இளைஞர்! பரபரப்பான வீடியோ காட்சிகள்
சாமி கும்பிட சென்ற இடத்தில் தலையை விட்டு மாட்டிக் கொண்ட இளைஞரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடவுள் வழிபாடு
பொதுவாக சிலர் கடவுள் தொடர்பான வழிபாடு என்றாலே அதீத பக்தியாக மாறிவிடுவார்கள்.
இவர்களின் பக்தி மற்றும் நேர்த்திகடன் பயங்கரமாக இருக்கும். இதன்படி, இளைஞரொருவர் சாமி கும்பிட சென்ற இடத்தில் யானை சிலையின் இடையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
இவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது குறித்த யானையின் அடியில் சென்று அடுத்தபக்கம் வந்து தெய்வங்களை வழிபடலாம் என நினைத்து சென்றுள்ளார். இறுதியில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இவரின் இந்த செயலை பார்த்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் பல வழிமுறைகளை கூறினார்கள். ஆனாலும் இளைஞரால் வெளியே வர முடியவில்லை.

வைரலாகும் வீடியோ காட்சி
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை பக்தரொருவர் தன்னுடைய டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து இளைஞர் வெளியே வருவாரா? இல்லையா? என்று சரியாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Any kind of excessive bhakti is injurious to health ? pic.twitter.com/mqQ7IQwcij
— ηᎥ†Ꭵղ (@nkk_123) December 4, 2022