பத்தி எரியும் கல்யாண மண்டபத்தில் பந்தியில் ஒரு கட்டு கட்டும் நபர்! தீ பிடிச்சா நமக்கென்ன? தீயாய் பரவும் காட்சி
திருமண மண்டபம் தீப்பிடித்து எரிந்த போதும் இருவர் மட்டும் உணவை ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இந்த சம்பவம் மஹாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவாண்டியில் நடைபெற்றுள்ளது.
சாப்பிட்டு கொண்டிருந்த நபர்கள் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும், சத்தத்தை பொருட்படுத்தாமல் சாப்பிட்டு வருகின்றனர்.
திரும்பி நாற்காலிகளில் அமர்ந்து நெருப்பைப் பார்க்கிறார்கள் தொடர்ந்து சாப்பிடுகின்றார்கள். இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
கல்யாணப் பந்தலில் தீ - உணவை ருசித்து உண்ணும் விருந்தினர்கள்!
— Lankasri FM (@lankasri_fm) December 3, 2021
Wedding guests continue to eat dinner even as fire rages on in the background.#wedding #food #fire #maharashtra pic.twitter.com/VBYCPwl8VW