எங்கள விட்டுருங்க அப்பா! கண்ணீருடன் கையெடுத்த கும்பிடும் ராஜ்கிரண் மனைவியின் மகள்.. நடந்தது என்ன?
பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்
தமிழ் சினிமாவில் எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பி் பின்னிபெடலெடுத்தவர் நடிகர் ராஜ்கிரண்.
முதன்முறையாக அதிக சம்பளம் வாங்கிய கதாநாயகன் என்ற பெருமையும் இவரையே சாரும்.
சமீபத்தில் இவரது மகள் பிரியா சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அது தன் மகள் இல்லை என்றும், வளர்ப்பு மகள் என்றும் விளக்கம் அளித்தார் ராஜ்கிரண்.
வைரலாகும் வீடியோ பதிவு
இந்நிலையில் தற்போது இவரின் வளர்ப்பு மகளான பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ராஜ்கிரணின் தூண்டுதலால் என்னுடைய தாயான கதீஜா ராஜ்கிரண் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை போடுவது, போனில் என்னை மெண்டல் டார்ச்சர் பண்ணுவது என்று தொல்லைக் கொடுத்து வந்தார்கள்.
என்னுடைய அப்பா என்னுடன் தான் இருக்கிறார், அவர் எனக்கு கொடுத்த நகைகளை திருப்பி தருமாறு கேட்டேன், அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
37 வயதாகியும் எனக்கு திருமணம் செய்து வைக்காமல் வேலைக்காரியை போன்று நடத்தி வந்தார்கள்.
என் பாட்டி எனக்கு கொடுத்த நகையை தான் நான் கேட்கிறேன், இதுதொடர்பாக போலிஸ் நிலையத்தில் விளக்கம் அளித்துள்ளேன் என அழுதபடி தெரிவித்துள்ளார்.