கிராமத்து பாணியில் காரசாரமாக பச்சை வெங்காய சட்னி... வெறும் 5 நிமிடம் போதும்!
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னி வகைகள் முக்கிய இடம் வகிக்கின்றது. இட்லி, தோசை, சப்பாத்தி, பஜ்ஜி, போண்டா ஏன் சாதத்துக்கும் கூட சட்னி வைத்தும் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.
அப்படிப்பட்ட சட்னி பிரியர்கள் கூட இதுவரை ட்ரை பண்ணாத, காரசாரமான பச்சை வெங்காய சட்னி ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதை செய்ய வெறும் 5 நிமிடங்ளே போதும்.

தேவையாக பொருட்கள்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் -2
பூண்டு - 6 அல்லது 7
நிலக்கடலை - 1 மேசைக்கரண்டி
வெள்ளை எள்ளு - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா -1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி

செய்முறை
முதலில், ஒரு பெரிய வெங்காயம் அல்லது இரண்டு நடுத்தர வெங்காயத்துடன் 5-6 பூண்டு பற்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும், அல்லது கரடுமுரடான, பாரம்பரிய பதத்திற்கு உரல் மற்றும் உலக்கையைப் பயன்படுத்தவும்.
பின்னர் அதனுடன் வெள்ளை எள் மற்றும் வேர்க்கடலை, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து லேசான புளிப்பு மற்றும் கிரீமி தன்மைக்காக தயிர் மற்றும் ஒரு கைப்பிளவு புதிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மேசைக்கரண்டி எண்ணெயைச் சூடாக்கி, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து, தாளித்து, சட்னியின் மேல் ஊற்றி நன்றாகக் கலந்துவிட்டால் அவ்வளவு தான் அருமையான சுவையில், பச்சை வெங்காய சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |