விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிபதி இடமாற்றம் - முக்கிய காரணம் என்ன?
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்த இந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

விஜய் சங்கீதா விவாகரத்து
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தற்போது சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் சங்கீதா மற்றும் விஜய் இருவரினுடைய விவாரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இடமாற்றம் செய்யபட்டுள்ளார்.
இது தற்போது மக்கள் அனைவர் மத்தியிலும் ஒரு கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செய்யபட்ட மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் அந்த நடிகையின் பயெரை விஜய்யால் அழுத்தம் வந்தால் வெளியிடுவதாகவும் கூறி இருந்தார்.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.

வழக்கு விசாரணையில் இரு தரப்பினரும் முழு சம்மதத்துடன் பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் போன்றவையும் இதன்போது பேசி முடிக்கபட்டதாம்.
தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களாலும் விஜயும் சங்கீதாவும் காணொளி மூலம் எதிர்வரும் விசாரணைகளில் ஆஜராவார்கள் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 20 விசாரணைக்கு வரவிருந்த விவாகரத்து வழக்கு வரும் ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் இருவர் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கு முடிவு என்ன வரும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி எழிலரசி விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இருவருமே நேரில் வரமுடியவில்லை என்றும் வீடியோ காலில் ஆஜராவதாகவும் மனு அளித்திருந்தனர்.
இதற்கு நீதிபதி எழிலரசி கேட்ட உடனே கான்ப்ரஸில் ஆஜராவதற்கு அனுமதி கொடுத்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |