சங்கீதாவிற்கு கடன் கொடுத்தாரா விஜய் - நீதிமன்றத்தின் முக்கிய முடிவு
நடிகர் விஜய் தனது மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தவெக விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் சில கருத்து முரண்பாடுகள் காரணமாக விஜய் மனைவி சங்கீதா விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவர் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்காக அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் சில மாறுபட்ட தகவல்கள் இருப்பதாக புகார் எழுந்தது.

அதன்படி விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது என தகவல் வெளியானது.
இது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த வழக்கு, ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேட்புமனுவில் பெருந்தொகையை மனைவி உள்ளிட்டோருக்கு கடனாக வழங்கியுள்ளதாக, விஜய் தனது வேட்புமனுவில் கூறியுள்ளது குறித்து ஆய்வு செய்ய மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதி வாக்காளர் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில் விஜய் மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனுவில் அவருக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதை போன்றது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தனியார் கல்வி அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாய் பணம் வழங்கியுள்ளது குறித்து வேட்புமனுவில் முறையாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் உத்தரவு படி இந்த கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டு, புதிய மனுவையும் விசாரணைக்கு ஏற்க முடியாது எனத் தெரிவித்தது. இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |