விஜயின் அம்மாவுக்கு மாலை மாற்றிய எஸ்.ஏ.சி! இந்த வயதிலும் வெட்கப்படும் ஜோடி
அண்மையில் 80 ஆவது பிறந்தநாளை மனைவியுடன் மட்டும் கொண்டாடிய எஸ்.ஏ.சி தன்னுடைய 80 ஆவது மணிவிழாவையும் மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார்.
குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் என யாரும் கலந்து கொள்ளவில்லை.
ஏற்கனவே இவரது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படங்கள் சில வெளியான நிலையில் விஜய் கலந்து கொள்ளாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களுடைய மணி விழா புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 80 வயது பூர்த்தி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தோம் என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
விஜய்யின் தாயின் அழைகிய வெட்க புன்னகை
இதில் பாட்டி வயதிலும் விஜய்யின் தாய் ஷோபா அழைகிய வெட்க புன்னகையோடு ஜொலிக்கிறார்.
இருவரும் மாலை மாற்றி கொள்ளும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.