மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ்
ரஷ்மிகா மந்தானா மற்றும் விஜய் தேவர்கொண்டாவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது அவர்களின் சங்கீத் போட்டொஸ் வெளியாகி உள்ளது.
ரஷ்மிகா விஜய் தேவர் கொண்டா
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணம் செய்த கொள்ளும் வரை மிகவும் ரகசியமாகவே அவர்களுடைய திருமண விடயங்களை வைத்திருந்தனர்.
இதில் ரஷ்மிகாவின் திருமண ஆடை முதல் விருந்து வரை அனைத்தும் சிறப்பாக இருந்தது.
இந்த நிலையில் ரஷ்மிகா மந்தானா மற்றம் விஜய் தேவரகொண்டா இருவரும் சேர்ந்து தங்களுடைய சங்கீத் விழாவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் ராஷ்மிகா, "காதல், ஆனந்தக் கண்ணீர், சிரிப்பு, இசை, பாடல் மற்றும் எங்கள் நடனத்தால் நிறைந்த இரவு. இது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான இரவாக இருந்தது" என்று எழுதியுள்ளார்.
"விஜய்யும் நானும் ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினோம். குடும்பமும் எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பியது. எங்கள் குடும்பத்தினர் அற்புதமாக நடனமாடியதைப் பார்த்தபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.”

மேலும் எங்கள் பால்குனி ஷேன் பீகாக் இந்தியா வடிவமைத்தவை என ராஷ்மிகா கூறினார். பின் "நண்பர்களே அற்புதமான உடைகள் இது மிகவும் கனமாக இருந்தது, ஆனால் இரவு முழுவதும் அணிந்திருந்தேன்!! 24.2.26!" "எங்கள் சங்கீத் இரவு.
சிரித்து அழுதோம், கால்கள் வலிக்கும் வரை நடனமாடினோம், அனைவரின் பேச்சு மற்றும் சர்ப்ரைஸ்களால் உணர்ச்சிவசப்பட்டோம். இது அழகான மனிதர்கள் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான பார்ட்டி."என ரஷ்மிகா பதிவிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.




| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |