வலியில் துடித்த டிடி! பெரும் சர்ச்சையை கிளப்பிய விஜய் தேவார்கொண்டாவின் பாதுகாவளர்
நடிகர் விஜய் தேவார்கொண்டாவின் பாதுகாவளர் ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் தமிழ் தெலுங்கு என்று பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் ப்ரோமஷன் பணிகளில் தீவிரமாக பட குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லைகர் படக்குழு சென்னை வந்து இருந்தனர்.
இதன்போது விஜய் தேவர்கொண்டாவை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து இருந்தார்கள்.
விஜய் தேவர் கொண்ட அரங்கிற்குள் வரும்போது அவருடன் இருந்த பாதுகாவலர் ஒருவர் விஜய் தேவர்கொண்டாவை யாரும் நெருங்காத வகையில் ரசிகர்களை தள்ளிவிட்டு கொண்டு வந்தார்.
அத்தோடு மட்டும் நிறுத்தாமல் ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகரை ஓங்கி அடித்து இருந்தார்.
விஜய் தேவரகொண்டாவுடன் வந்த அந்த ஒரு நபர் மட்டும் தான் ரசிகர்கள் இடம் படு ஆவேசமாக நடந்து கொண்டார்.
வலியால் துடி துடித்த டிடி
மேலும் மேடையில் விஜய் தேவர் கொண்டா உடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரது சட்டையை பிடித்து வேகமாக தள்ளிவிட்டார்.
அப்போது அருகில் இருந்த பிரபல தொகுப்பாளினி டிடியின் கையில் அடி விழ ஒரு கணம் வலியால் துடித்து போயுள்ளார். எனினும் பொது நிகழ்ச்சி என்பதால் அந்த வலியை வெளியில் காட்டாமல் டிடி எப்படியோ சமாளித்து இருந்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர விஜய் தேவர் கொண்டாவின் பாதுகாவளரை அனைவரும் திட்டி வருகின்றனர்.