வீடு துடைக்கும் போது இந்த தவறை செய்றீங்களா? துரதிஷ்டம் துரத்தி வருமாம்
வீடு துடைக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க வைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.
பொதுவாக வீடு சுத்தம் செய்வது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகும். வீட்டை சுத்தம் செய்வதால் அழுக்குகள் அகற்றப்படுவதுடன், நோய்களும் தாக்காமல் இருக்கும்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் வீடு லட்சுமி தேவி தங்கும் இடம் என்பதால் சுத்தமாக இருந்தால் தான் ஆசீர்வாதம், பண வரவு கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.
இத்தகைய சூழ்நிலைகள், வீட்டை சுத்தம் செய்யும் போது செய்யப்படும் சில தவறுகள் உடல் நலத்தை மட்டுமல்ல, பணத்தையும் இழக்க நேரிடும் மற்றும் துரதிஷ்டம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
செய்யக்கூடாத தவறுகள்
வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வெளியே சென்ற உடனே தரையை துடைக்கக்கூடாது. சிறிது நேரம் கழித்து துடைக்கலாம். இல்லையெனில் குறித்த நபர் உடல்நல பிரச்சனையை எதிர்கொள்வதுடன், வேலை தொழிலில் இழப்பு ஏற்படும்.
சுத்தம் செய்த பின்பு குறித்த அழுக்கு தண்ணீரை வீட்டின் முன்பு ஊற்றக்கூடாது. இது அசுபமாக கருதப்படுகின்றது. இதனால் லட்சுமி தேவியின் கோபம் உங்கள் மீது வந்துவிடும்.
வீட்டை துடைப்பதற்கு உடைந்த வாளியை பயன்படுத்தக் கூடாது. அதே போன்று சிவப்பு நிறத்தில் உள்ள வாளியையும் பயன்படுத்தக்கூடாது.
வியாழன் கிழமையில் வீட்டின் தரையை துடைக்க வேண்டும். இதனால் வியாழன் கிரகம் மோசமான விளையை ஏற்படுத்துவதுடன், வறுமை வீட்டில் பெருகும்.
கட்டாயம் செய்ய வேண்டியவை
வீடு துடைக்கும் போது குறித்த தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை சேர்க்க வேண்டும். ஏனெனில் வீட்டில் எதிர்மறை சக்தி நீங்குவதுடன், தரையும் பளபளப்பாக இருக்கும்.
ஆனால் வியாழன், செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தண்ணீரில் கல் உப்பு சேர்க்கக்கூடாது. இது எதிர்மறை விளைவினை ஏற்படுத்துமாம்.
வீட்டை துடைக்கும் போது வடக்கு திசையிலிருந்து துடைக்க ஆரம்பித்து வீட்டை முழுவதுமாக துடைக்க வேண்டுமாம்.
மதிய வேளையில் வீட்டின் தரையை துடைக்க கூடாது. வீடு துடைப்பதற்கு சிறந்த நேரம் காலை நேரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |