உங்க வீட்டுல மகிழ்ச்சி அதிகரிக்கணுமா? வாஸ்து படி இந்த ஓவியத்தை வைங்க
வாஸ்து சாஸ்திரபடி வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிப்பதற்கு என்னென்ன படங்களை வீட்டில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் நாம் அலங்காரத்திற்காக தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் கூட நமது மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கின்றது. சரியான ஓவியத்தினை சரியான திசையில் வைத்தால், வீட்டில் அமைதி இருப்பதுடன் முன்னேற்றமும் காணப்படும்.
வீட்டினை அழகை அதிகரிப்பதற்கு பிரபல ஓவியர்களின் படைப்புகளை தேர்வு செய்யும் நிலையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான ஓவியத்தினை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.
ஏனெனில் இதில் கூட நமது நேர்மறையான எண்ணங்கள் அதிகரிப்பதுடன், இதற்காக நாம் என்னென்ன ஓவியங்களை வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ஓவியங்கள் சிறந்ததாம்...
வீட்டில் வெள்ளை நிற ஏழு குதிரைகள் ஓடுவது போன்று உள்ள ஓவியம், நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றது. இந்த குதிரையின் பின்னே நீலம் அல்லது சூரிய அஸ்தமன வானம் காட்சி இருக்க வேண்டுமாம். இவை வேகம், வெற்றி, வலிமை இவற்றின் குறையீடாக இருக்கும் நிலையில், வீட்டில் கிழக்கு அல்லது தெற்கு சுவற்றில் தொங்கவிட வேண்டும்.

நமது வீட்டிற்கு எப்பொழுதும் புத்துணர்ச்சி, மகிழ்ச்சியினை தரும் அடுத்த ஓவியமாக நீர்வீழ்ச்சி இருக்கின்றது. ஓடும் நிரானது நல்ல ஆற்றல் ஓட்டத்தை குறிக்கும். கண்களுக்கு இனிமையாகவும், இந்த ஓவியம் மன அமைதியை அதிகரிப்பதுடன், வீட்டில் வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு சுற்றில் வைக்கவும். இருண்ட அல்லது பயமுறுத்தும் ஓவியத்தை தவிர்க்கவும்.

இதே போன்று விநாயகர் ஓவியமும் வீட்டில் நல்லதொரு ஆற்றலை கொடுப்பதுடன், தடைகளை நீக்கும் தெய்வமாக இருக்கின்றது. வீட்டின் வாசலில் தொங்கவிட்டால், தீய சக்திகள் விலகி நல்ல அதிர்ஷ்டம் கிடைக்குமாம். அலுவலகங்களில் வைத்தாலும் வளர்ச்சி, சாதகமான ஆற்றலும் கிடைக்கும்.

அடுத்ததாக மலை ஓவியம் சிறந்த தேர்வாக இருக்கின்றது. மலைகளின் நிலைத்தன்மையானது பாதுகாப்பின் அடையாளமாக கருதப்படுவதுடன், வாழ்க்கையில் உறுதி, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணவும் கிடைக்கும். இதனை தென்கிழக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம்.

கடைசியாக மயில் ஓவியம் வீட்டிற்கு அழகையும், வளத்தையும் தருவதுடன், வண்ணமயான மயில்கள் உயிர்சக்தி, செழிப்பின் குறியீடாகவும் கருதப்படுகின்றது. ஜோடியாக அல்லது குழுவாக இருக்கும் மயில் ஓவியம் குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கின்றது. இதனை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் தொங்கவிடலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |