வசம்பை அதிகமாக சாப்பிட்டால் இந்த ஆபத்துகளை உண்டாக்குமா? யார் யாரெல்லாம் சாப்பிட கூடாது?
வசம்பு. பெயர் சொல்லகூடாத பொருள் என்று சொல்வார்கள். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. பிறந்த பிள்ளை இருக்கும் வீட்டில் வசம்பு கண்டிப்பாக இருக்கும்.
பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு அருமருந்தாக பயன்படுத்தப்படும் வசம்பு இருந்தால் பிறந்த குழந்தையை வளர்த்துவிடலாம் என்று சொல்வார்கள்.
வசம்புவை குழந்தைக்கு எப்படி கொடுக்கலாம் என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம்.
அதிகப்படியாக வசம்புவை எடுத்துகொள்ளும் போது என்ன மாதிரியான பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதை பார்க்கலாம்.
வசம்புவை அளவாக பயன்படுத்தினால் அது நன்மையை அளிக்கும். குழந்தை பிறந்த பிறகு வசம்புவை பயன்படுத்தும் போது அளவாக பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் அது பக்கவிளைவையும் உண்டாக்கும்.
வசம்பை அதிகமாக கொடுத்தால் குழந்தையின் வயிற்று கோளாறு நீங்குவதற்கு பதில் வயிற்றுக்கோளாறை உண்டாக்கிவிடும். அதிக வயிற்றுப்போக்கை குழந்தைக்கு தரும்.
அதிக வெப்பச்சுவை கொண்டிருப்பதால் இது குமட்டலை உண்டாக்கும். வசம்பு அளவை அதிகரித்துகொடுக்கும் போது குழந்தைக்கு பேச்சுத்திறன் வேகமாக வளர்வதை காட்டிலும் திக்கு வாய் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
பேச்சு குளறாமல் இருக்க வசம்பு பயன்படுத்தும் நிலை போய் அதுவே திக்கு வாய் பிரச்சனையை உண்டாக்கிவிடும். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூட இதை அளவாகவே பயன்படுத்த வேண்டும். அமிர்தமே ஆனாலும் அளவு அதிகமாக பயன்படுத்தக்கூடாது.
தவிர்க்க வேண்டியவர்கள்
- கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது வசம்புவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது பாதுகாப்பற்றதும் கூட.
- இதயக்கோளாறுகள் இருப்பவர்கள் வசம்பு எடுக்க வேண்டாம். இது இதயத்துடிப்பில் மாற்றங்களை உண்டாக்க வாய்ப்புண்டு. இதய கோளாறுகளை இது மோசமாக்கும்.
- குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள் வசம்புவை மருந்தாக எடுக்கும் போது அது இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும் அபாயம் உண்டு.
- அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பவர்கள் வேறு ஏதேனும் சிகிச்சைக்கு வசம்புவை பயன்படுத்தினால் அவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.