நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால்
மகள் ஜோவிகாவின் தயாரிப்பில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் தான் 'Mrs and Mr'.ஜூலை 11 ஆம் திகதி திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது.
குறிப்பாக இந்தப் படத்தின் காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர். அது குறித்து தற்போது வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர்.
முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.
முதலில், ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்.
அதன் பிறகு, ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. வனிதா விஜயகுமாருக்கும் ராஜன் என்பவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
பிறகு நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்றார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 3 குழந்தைகளுக்கு தாயான வனிதா, தற்போது தனது மகள் ஜோவிகாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
அவ்வப்போது வனிதா மீது கிசுகிசுக்கள், சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தாலும், விமர்சனங்களை தனது பதிலடி மூலம் சிறப்பாக கையாள்வதில் இவர் கில்லாடி என்பது அனைவரும் அறிந்ததே.
வனிதா பேட்டி
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் தான் 'Mrs and Mr'. அதனை இவரது மகள் ஜோவிகா தயாரித்திருந்தார்.பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்தே இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே ஜோவிகா தெரிவித்திருந்தார்.
ஜூலை 11 ஆம் திகதி திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர்.
இது குறித்து சமீபத்தில் வனிதா விஜயகுமார் ஒரு பேட்டியில், நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், முதலில் என்னுடைய படம் பாருங்கள், அதன் பின்னர் என்னை என்னத் திட்டினாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்.
என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட். என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காபி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள எதையும் நான் எந்தப் படத்தில் இருந்தும் சுருட்டவில்லை, நீங்கள் படத்தை பார்த்தால் தான் புரியும் என தெரிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |