வள்ளலார் தந்த மரணமில்லா வாழ்வு... மரணத்தை வெல்லும் ரகசியம்!
மரணம் எல்லோருக்கும் பிறந்த கணத்திலிருந்து உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான் என்பது அனைவரும் அறிந்ததே.
சாகாதவனே சன்மார்க்கி, வள்ளலாரைப் பொருத்தவரையில் மரணமென்பது செயற்கை. மரணமில்லா பெரு வாழ்வு இறைவனோடு கலப்பதை குறிப்பது.மறுபிறவி இல்லாதது.
இந்த பிறவியில் மரணம் நிச்சயம்.இறை சிந்தனை மேலோங்கி வாழ்ந்தால் இறைவனடி நிச்சயம்.
சித்தர் என்போர் வீடுபேறு அடைந்தவர்கள் ஆவார்கள். அதாவது அட்டமாசித்தி யோகங்களை பெற்றவர்கள்.
சித்தர்கள் மனிதர்களின் மீது மட்டுமல்ல மற்ற எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர்கள்.அப்படி “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என பாடியவர் வள்ளலார்.
சமயத்துறையில் சாதி வேறுபாடு முதலிய எல்லா வேறுபாட்டையும் கடந்து சமரச சன்மார்க்க நெறியான வைணவர்களின் திருமால் நெறியையும், சைவர்களின் சித்தாந்த நெறி இணையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் தான் வள்ளலார்.
சன்மார்க்க சொற்பொழிவாளர் செந்தில் குமார் உரைக்கும் வள்ளலாரைப் பற்றிய முழுமையான வரலாறு குறித்து முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.