டேய்… என்னடா பண்றது? அந்த பிரம்மாண்ட மேடையில் வடிவேலுவுடன் விவேக் பேசிய வைரல் காட்சி
நகைச்சுவை நடிகர் விவேக்கின் ம.றை.வு திரைத் துறைக்கு மட்டும் அல்ல, இந்த தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்பு என பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த எந்திரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விவேக் வடிவேலுவுடன் வாடா போடா என உரிமையோட பேச, வடிவேலுவும் நண்பா டே.ய்.. என உ.ரிமையோடு பேசி அந்த மேடையை அந்த இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்களும் களைகட்ட வைத்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எந்திரன் இசை விழாவை விவேக் தொகுத்து வழங்கியிருந்த போது அவ்வாறு பேசிக் கொண்டனர். அப்போது என்னடா இவ்வளவு தூரத்துல நிக்கிறோம் என வடிவேலு கேட்டதற்கு, என்னடா பண்றது பெரிய ஸ்டேஜாக போட்டுவிட்டனர் என விவேக் பதில் அளித்தார்.
அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் வடிவேலுவும் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்ட மேடையில் வடிவேலுவுடன் விவேக் பேசிய வைரல் காட்சி pic.twitter.com/TiOuFZopXS
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) April 18, 2021