மரணத்திற்காக காத்திருந்த தாய்! நேற்று நடந்தது என்ன? வடிவேலு உடைத்த உண்மை
நடிகர் வடிவேலு தனது தாயின் இறப்பைக் குறித்து கூறியுள்ள உண்மை அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இன்றும் கொடிகட்டி பறந்து வரும் வைகைப்புயலு வடிவேலு, 1988ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். பின்பு முன்னணி நடிகர்களுடன் பல படங்களை நடித்த இவர், ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார்.
இவர் கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கிய போது, இயக்குனர் சங்கருக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவிட்டதால், பட ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர், கடந்த ஆண்டு மீண்டும் நடிப்பிற்கு வந்த நாய் சேகர் படத்தில் நடித்தார்.
ஆனால் வடிவேலு நினைத்தது போன்று நாய் சேகர் படம் வெற்றி பெறாமல் தோல்வியையே தழுவியது.
தாயார் மரணம்
இந்நிலையில் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா (87) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு உடன்பிறந்தவர்கள் 7 பேர்... அனைவரும் கஷ்டப்படும் நிலையில் உள்ளனர். இவர்களில் வடிவேலு மட்டுமே நல்ல நிலையில் இருந்து வருகின்றார்.
இவரது தாயார் மதுரையில் உள்ள வீரகனூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த நிலையில், அவ்வப்போது வடிவேலு சென்று பார்த்து வந்துள்ளார்.
வைகைப்புயலின் தாயாரின் இறப்பினை அறிந்த முதல்வர் ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள நிலையில், நடிகர் வடிவேலு தனது தாய் இறந்ததை குறித்து கூறியுள்ளார்.
சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி சுகமாக இருந்து வந்தாராம். திடீரென மார்பு சளி அதிகமாகி மூச்சு திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் பொங்கல் முடியும் வரை யாரையும் தொந்தரவு செய்யவில்லை என்றும் மாடு பிடித்துவிட்டு வாங்க அதன் பின்பு போகிறேன் என்று கூறி பண்டிகையை முடித்துவிட்டு யாருக்கும் தொல்லை கொடுக்காமல் போய்விட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.
#Vadivelu About His Mother Death pic.twitter.com/D7Ng4I0hmI
— chettyrajubhai (@chettyrajubhai) January 19, 2023