கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்ட மனிதர்கள்.... மேகவெடிப்பால் ஏற்பட்ட பேரழிவு
உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேகவெடிப்பால் ஏற்பட்ட பேரழிவு
இந்திய மாநிலம் உத்தரகாண்ட் உத்தர்காசியில் உள்ள ஹர்சில் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மேக வெடிப்பினைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த பேரழிவில் சிக்கி பலர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தின் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தாலி கிராமத்தில் மதியம் 1.45 மணியளவில் ஏற்பட்ட மேகவெடிப்பினால், மலையிலிருந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகளை தரைமட்டமாக்கியுள்ளது.
இதில் நிலச்சரிவிலிருந்து தப்பிக்க மக்கள் அங்கும் இங்கும் ஓடும் காட்சியும், அடுத்த சில நொடிகளில் அவர்கள் உயிரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
இந்திய ராணுவ மீட்பு படையினர் உத்தரகாண்ட்டிற்கு சென்றுள்ள நிலையில், இன்னும் உயிர் பலி அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
🙏😭Let hill stations be. Let ecologically sensitive places be. Don't kill them under the garb of tourism. Don't be greedy. There are 100s of places like this precariously placed waiting for disaster. Let it be. Undo all the damage NOW 😭🙏#Uttarakhand #uttarkashicloudburst pic.twitter.com/EwNA0i4h43
— Saikiran Kannan | 赛基兰坎南 (@saikirankannan) August 5, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |