ஒரே நாளில் ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
இதனிடையே, இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,676 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 99,74,843 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 149 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவிலும், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 94,34,393 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 1,240 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது.