ஒரு இரவில் தாய் கண்ட கனவு... அடுத்த நாளே குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! உண்மை சம்பவம்
தாய் கண்ட கனவு அவரின் பிள்ளைகளுக்கே ஆபத்தில் ஏற்படுத்திய சம்பவம் மருத்துவர்களை நடுநடுங்க வைத்திருக்கிறது.
இங்கிலாந்து, Crawley என்ற பகுதியில் Laks Rana என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன் இரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென தூக்கத்தில் எழுந்து கதறி அழுதுள்ளார். ஆனால், வீட்டில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் என்ன நடந்தது எனக் கேட்க, நான் மோசமான ஒரு கனவைக் கண்டேன். அதனால் தான் அழுகிறேன் எனக் கூறியுள்ளார்.
உடனே குடும்பத்தினர் இது கனவு தானே பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என் ஆறுதல் கூறியுள்ளார்கள். ஆனாலும், இதை Laks Rana-வின் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்த நாள் காலை விடிந்த உடன் தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு Laks Rana மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்குத் தனது பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு மருத்துவரிடம் Laks Rana கூறியுள்ளார். அவரும் குழந்தைகள் நல்லா தானே இருக்கிறார்கள் எதற்கு மருத்துவ பரிசோதனை எனக் கேட்டுள்ளார்.
ஆனால் Laks Rana மருத்துவ பரிசோதனை செய்வதில் உறுதியாக இருந்ததையடுத்து, அவரது மகனான Amritக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது. அதன் பின்னர் இரண்டாவது மகளான Anayaவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது சிறுமியின் காலில் ஒரு காயம் இருப்பதை மருத்துவர் கவனிக்க, மருத்துவ பரிசோதனை முடிவு தான் மொத்த குடும்பத்தையும் புரட்டிப் போட்டது. மேலும், பரிசோதனையில் Anayaவுக்கு 'Acute Lymphoblastic Leukaemia' என்ற கொடிய புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. இது ரத்தத்தில் உள்ள செல்களை அழித்து, ரத்தம் மற்றும் எலும்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனிடையே ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதனால் தான் Laks Rana தனது பிள்ளைகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளார் என்பதைப் புரிந்துகொண்ட மருத்துவர் என்ன நடந்தது எனக் கேட்டுள்ளார். அப்போது, Laks Rana கூறிய சம்பவத்தைக் கேட்டறிந்த மருத்துவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக Laks Rana தூக்கத்தில் கண்ட கனவில், தனது பிள்ளைகளுக்கு இறுதிச் சடங்கு செய்வது போலக் கனவு வந்துள்ளது. அது கனவு என்றாலும் Laks Ranaயின் உள்ளுணர்வு ஏதோ சொல்லிக் கொண்டே இருந்துள்ளது.
இதனால் தான் அவர் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார்.
இதனிடையே, தாய் Laks Rana தனது கனவில் வந்த சம்பவத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனைக்கு வந்ததால் தான் தனது குழந்தைக்கு இருக்கும் கொடிய நோயைக் கண்டுபிடிக்க முடிந்தது. இதனால் அவர்களது குடும்பமே அச்சத்தில் இருந்துள்ளனர்.