திடீரென இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் மட்டும் இத்தனை பேர் பலியா?
கொரோனா வைரஸ் உலகமெங்கும் தடுப்பூசியின் முயற்சியால் குறைந்து வந்தாலும் அதன் வீரியம் பலருக்கும் இன்று வரை பரவி கொண்டு தான் இருக்கிறது.
இதனிடையே, இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
கடந்த ஒரே நாளில் 49 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி உள்ளது. குறிப்பாக தொடர்ந்து 6-வது நாளாக 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
மேலும், இதுவரை மொத்தம் 84 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த நாளில் மட்டுமே 45 பேர் கொரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 629 பேர் இறந்து உள்ளனர்.
தற்போது அங்கு 7 ஆயிரத்து 97 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், 78 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.