பதவி ஏற்பு நிகழ்வில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... தம்பியை கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி
மிக எளிமையான முறையில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த எளிமையான நிகழ்வில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இதில் ஸ்டாலின் குடும்பத்தினர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு தனது அண்ணன் அழகிரிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இன்று காலை 9.10 அளவில்”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” என்று தொடங்கி பதவி ஏற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஸ்டாலின். ஸ்டாலின் பதவியேற்ற அந்த நொடியில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் திடீரெனக் கண்கலங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவரோடு உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பலரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. தயாநிதியை பார்த்ததும் கட்டியணைத்து வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த காட்சியில் பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. மு.க.அழகிரியின் மகள் கயல்விழியும் தனது சித்தப்பா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இக்காணொளியினை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அண்ணன் @dhayaalagiri & @Udhaystalin 😍😍😍😍😍😍😍#CMStalin pic.twitter.com/pd1zW64IZw
— ஆந்தைகண்ணன் (@cinemascopetaml) May 7, 2021