Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
மின்னல் வேகத்தில் இரண்டு பாம்புகள் சென்றுள்ள நிலையில், இதனை படம்பிடித்த நபருக்கு ஒரு பாம்பு மரண பயத்தை காட்டியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
படம்பிடித்தவருக்கு ஏற்பட்ட மரண பயம்
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு மனிதர்களை பாம்புகள் அச்சுறுத்தி வருவதற்கு காரணம் மனிதர்களால் தமக்கு தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்பது தான்.
இங்கு இரண்டு பாம்புகள் ஜோடியாக மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இதனை நபர் படமெடுத்துள்ளார். திடீரென படமெடுத்த நபரை குறித்த பாம்பில் ஒன்று தாக்க முயன்றுள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |