Viral Video: இரட்டை தலை பாம்பின் சட்டையை உரிக்கும் மனிதர்... புல்லரிக்க வைக்கும் காட்சி
இரட்டை தலை பாம்பின் சட்டையை நபர் ஒருவர் உரிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
பாம்பு என்றாலே பெரும்பாலான மக்கள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். ஏனெனில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் மனிதர்களை தீண்டினால் உடனே விஷம் உடலில் ஏறி மரணத்தை கூட ஏற்படுத்தும்.
ஆனால் இங்கு நபர் ஒருவர் இரட்டை தலை பாம்பிற்கு அசால்டாக சட்டையை உரித்துள்ளார். இக்காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பாம்புகள் தனது தோலை உரிக்கும் நேரம் வருவதற்கு முன்பு புதிய தோல் வளர்ந்திருக்கும். குறித்த காட்சியில் அவ்வாறு காணப்படும் பழைய தோலை நபர் ஒருவர் உரித்துள்ளார்.
பாம்புகள் தனது சட்டையை உரிப்பதற்கு முன்பு, தனது மூக்கை கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்து தேய்குமாம். அப்பொழுது அந்த தோல் கிழிந்து பழைய தோல் லாவகமாக வெளியே வந்துவிடுமாம்.
பாம்பு உரித்த சட்டை பாம்பின் வடிவத்திலேயே முழுவதுமாக இருந்தால் அது ஆரோக்கியமாக பாம்பு என்பது பொருள். பாம்புகள் தனது தோலின் மீது ஒட்டிக் கொண்டுள்ள ஒட்டுண்ணிகளை அகற்றுவதற்கு இவ்வாறு சட்டையை உரிப்பதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |