முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? மஞ்சள் மற்றும் கடலை மாவு எது பெஸ்ட்?
முக அழகை பேணும் பெண்களுக்கு மஞ்சள் மற்றும் கடலைமாவு இவற்றில் எது பெஸ்ட்டானது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே பெண்கள் தங்களது அழகை பராமரிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். அதிலும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு அழகை தக்க வைத்துக் கொள்கின்றனர்.
ஆனால் எந்தவொரு செலவும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டு இன்னும் அழகாக உங்களது முகத்தை காட்டலாம். அந்த வகையில் மஞ்சள், கடலை மாவு இவற்றில் எது நல்லது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் மற்றும் கடலைமாவு
கடலை மாவு முகத்தில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் நீக்கும். இது இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் என்பதால், இறந்த சருமத்தை நீக்கி சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும் மாற்றும்.
கடலை மாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தின் நிறம் பளபளப்பாகவும், தெளிவாகவும் மாறும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது ரொம்பவே நல்லதாகும்.
மஞ்சளில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் தழும்புகள் மற்றும் பருக்களை குணப்படுத்த உதவுகின்றது.
மஞ்சள் சருமத்தை பளபளப்பாக மாற்றும். மேலும் மஞ்சளில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் சருமத்தை வயதான அறிகுறியில் இருந்தும் பாதுகாக்கின்றது.
இரண்டில் எது பெஸ்ட்?
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் அல்லது ஆழமான சுத்திகரிப்பு தேவைப்பட்டால் கடலை மாவு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
உங்களது முகத்தில் உள்ள கறைகள், பருக்கள், வீக்கம், கரும்புள்ளிகள் பிரச்சனைகள் காணப்பட்டால் மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.
கடலை மாவு மஞ்சள் மற்றும் தயிர் கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தினால் இரண்டும் சேர்ந்து பல நன்மைகளை வழங்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |