நகைக்கடை கல்லாப்பெட்டியை பாதுகாக்கும் அணில்; இணையத்தில் வைரலாகும் காணொளி
நகைக்கடையில் உள்ள கல்லாப்பெட்டியை அணில் ஒன்று பாதுகாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,.
பொதுவாக விலங்கினங்கள் என்றாலே நன்றியுடனும், விஸ்வாத்துடனும் இருக்கும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் எப்பொழுதும் ஒரு வித பாதுகாவலனாகவே இருக்கிறது.
அந்த வகையில், அணில் ஒன்று நகைக்கடையில் கல்லாப்பெட்டியை பாதுகாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
துருக்கியில் டையார்பாகிர் நகரில் மெஹ்மத் யுக்செல் என்பவர் நகைக்கடை வைத்து நடத்துவருகிறார். அதுமட்டுமின்றி மெஹ்மத், மெமோகன் என்ற அணிலையும் ஆசையாக வளர்த்துவருகிறார்.
இந்த மெமோகன் என்ற இந்த அணில் செய்யும் விஷயம் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த நகைக் கடையில் மெமோகன் இருக்கும் போது தன் உரிமையாளர் மெஹ்மத்தை தவிர வேறு யாராவது பணத்தை எடுக்க வந்தால், கடித்துவிடுமாம்.
பல பேர் இம்மாதிரி மெமோகன் அணிலிடம் கடிவாங்கி ஓடியுள்ளதாகவும் மெஹ்மத் யுக்செல் கூறுகிறார்.
மேலும், நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் இந்த அணில் சி சி டிவி கேமரா போல உற்று நோக்குமாம். வாடிக்கையாளர்களின் குழந்தைகளோடு மெமோகன் உற்சாகமாக விளையாடுவதையும் காணலாம்.
குறிப்பிட்ட வீடியோ காணொளியை இங்கே க்ளிக் செய்து காணலாம்....