நள்ளிரவில் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட ஆண் குழந்தை: பின்பு நடந்தது என்ன?
தென்காசி அருகே வனப்பகுதியில் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதாக கூறி சாமியார், 3 பெண்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி அணை பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று செல்வதைக் கண்ட அப்பகுதிவாசிகள் பின்தொடர்ந்து சென்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது காவி உடையணிந்த முதியவர் ஒருவர், 2 சிறுமிகள், கைக்குழந்தைளுடன் ஓர் ஆண் மற்றும் பெண் இருந்ததுடன், குழந்தையை தலைகீழாகக் படித்தபடி அந்த முதியவர் ஊதுபத்தி காட்டியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் குழந்தையை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், 5 பேரையும் கைது செய்துள்ளனர்.