விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா கொடுத்த பதில்!
சர்ச்சைகளுக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய்யுடன் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது ஏன்?” என்று ஒரு நிரூபர் கேள்வி கேட்போது, அதற்கு த்ரிஷா ரியாக்ட் செய்த விதம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சை
சமீப காலமாக விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையால் இணையமே போர்களமாக மாறியுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தார்.
குறித்த விடயம் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தியுள்ளதாக விஜய் ரசிகர்களில் ஒருசாரார் உட்பட நெட்டிசென்கள் கொந்தளித்து வருகின்றார்கள்.

தழிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தவெக கட்சியின் தலைவராக விஜய் - த்ரிஷாவின் இந்த செயல் மிகவும் மோசமானது என பிரபலங்களும் கண்டனம் தெரித்து காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இது குறித்து பேசுகையில், “குந்தவையை வீட்டிலேயே குந்த வைப்பது நல்லது” என கூறிய விடயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதனை தொடர்ந்து காணொளி வெளிட்டும் பார்திபன் த்ரிஷாவின் செயல் பற்றி தாக்கி பேசியிருந்தார்.

,இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த த்ரிஷாவிடம், “தவெக தலைவர் விஜய்யுடன் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது ஏன்?” என்று ஒரு நிரூபர் கேள்வி எழுப்ப அதற்கு த்ரிஷா பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாகவே கடந்து சென்றுள்ளார். குறித்த காணொளிகளும், புகைப்படங்களும் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.