காதல் மட்டுமே வாழ்வு இல்லை.. ஆனால் - நடிகை த்ரிஷாவின் பதிவு
திரிஷாவை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வரும் நிலையில் தற்போது த்ரிஷா தன்னுடைய இன்டாகிராம் போஸ்டில் காதல் பற்றி கூறி இருக்கும் விடயங்கள் தற்போது விவாதத்தை தூண்டி உள்ளது.

நடிகை த்ரிஷா
தமிழ் திரை உலகில் தற்போது சுமார் 22 ஆண்டு காலமாக தன்னுடைய நடிப்பு திறமையால் தனக்கென ஒரு இடம் பதித்து வைத்துள்ளார் நடிழைக த்ரிஷா.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றி படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்றும் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சமீபத்தில் சில சர்ச்சசைகள் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இன்றும் த்ரிஷாவின் திரைப்படங்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. த்ரிஷாவிற்கு தற்போது 42 யதாகும் நிலையில் அவர் இன்னும் சிங்கிளாதகவே வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து இணையவாசிகள் த்ரிஷாவின் சமூக வலைத்தள பக்கங்களை நோட்டமிட்டு வருகின்றனர்.

அதன்படி சமீபத்தில் தனது வளர்ப்பு நாயை கோயிலுக்கு அழைத்துச் சென்று, அதனுடன் செல்பி எடுத்து பதிவிட்டிருந்தார். இப்படி தான் தற்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் பற்றிய ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து இணையவாசிகள் மத்தியில் இது விவாதத்தை தூண்டி உள்ளது.

த்ரிஷா அந்த பதிவில் 'காதல் மட்டுமே எல்லாம் அல்ல. ஆனால், காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது' என்று பதிவிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |