பூரண குணமடைந்த டி.ராஜேந்தர்! சென்னை திரும்பிய சிம்பு?
சிம்புவின் தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் டி. ராஜேந்தர். இவர் நடிகர் சிம்புவின் தந்தை ஆவார்.
டி. ராஜேந்தருக்கு சமீபத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிம்புவும் தனது தந்தையுடன் அமெரிக்காவுக்கு சென்று அவரை உடனிருந்து கவனித்து கொண்டார்.
இந்நிலையில் டி.ராஜேந்தருக்கு தரப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.
மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதால் வெளிநாட்டிலேயே ஒரு மாத காலம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
சிம்பு இதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, படப்பிடிப்பிடிப்பில் கலந்து கொள்ள தமிழகம் திரும்பியுள்ளார்.
தற்கொலைக்கு முன் நெஞ்சை உருக்கும் சில்க் ஸ்மிதாவின் கடிதம்! என்ன கூறியிருக்கிறார்?