சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு- இரங்கல் தெரிவிக்கும் அரசியல் பிரபலங்கள்
தமிழ்நாட்டில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக தனி ஆளாக நின்று போராடியவர் டிராபிக் ராமசாமி.
இவர், நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகளை தொடர்ந்து, அதன் மூலம் பல்வேறு சமுதாய பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீரென டிராபிக் ராமசாமி, சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
மேலும், அவருக்கு வயது 87. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதுமையிலும் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக குரல்கொடுத்த சமூக போராளி திரு.டிராபிக் ராமசாமி அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 4, 2021
அவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/cnPVjCYYCn
மக்களின் நலனுக்காக தன்னலம் இன்றி உழைத்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, தேமுதிக மீது என்றும் மிகுந்த பற்று கொண்டிருந்தார். அவருடைய மறைவு ஈடு இணை செய்ய முடியாதது. எனவே அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.#டிராபிக்ராமசாமி pic.twitter.com/tYVM8u4FHw
— Vijayakant (@iVijayakant) May 4, 2021