இலங்கையில் ஓர் அதிசயம்! வெளிநாட்டுப் பிரஜைகளின் சொர்க்கபுரி எல்ல
இலங்கையின் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஓர் தலமாக எல்ல கருதப்படுகின்றது.
இலங்கை பிரஜைகளை விடவும் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எல்ல பகுதியை நோக்கி படையெடுப்பதனை நாம் காண முடிகிறது.
இலங்கையின் ஊவா மாகாணம் பதுளை மவாட்டத்தில் எல்ல நகரம் அமைந்துள்ளது.
காண்போரை கவர்ந்திழுக்கும் இயற்கை காட்சிகளை நிரம்பக் கொண்ட ஓர் அழகிய இடமாக எல்ல கருதப்படுகின்றது.
கொழும்பிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் எல்ல பகுதி அமைந்துள்ளது.
அநேகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எல்ல பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அதிக நாட்டம் காண்பிக்கின்றனர்.
அந்த எழில் கொஞ்சும் மலைப் பாங்கான பகுதிகளின் காட்சி அமைப்பு அநேகரை கவர்ந்திழுக்கக் கூடியது எனலாம்.
எல்ல பகுதிக்கு நீங்கள் சுற்றுலா சென்றால் பார்க்க வேண்டிய சில முக்கியமான இடங்களை நாம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
எல்ல கற்பாறை மலை
பூணாகல மழை உச்சியின் கீழ் பகுதியில் எல்ல கற்பாறை மலை அமைந்துள்ளது.
இந்த மலையின் விசேட அம்சம் யாதெனில் பைனஸ் காடுகளுக்கு மத்தியில் இந்த மலை அமைந்துள்ளது.
மலை உச்சிக்கு சென்று விசாலமான பகுதியை காண்பதற்கு முடியும். 500 அடிக்கு மேல் உயரத்தில் இருந்து இந்த பகுதியை பார்க்க முடிகிறது.
சிறிய சிவனொளிபாதமலை
எல்ல மலைக்கு எதிரில் தென்படும் மலையை நாம் சிறிய சிவனொளிபாத மலை என அழைக்கின்றோம்.
சிவனொளிபாத மலை மற்றும் சிறிய சிவனொளிபாத மலை என்பனவற்றுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை காணப்படுகின்றது.
இரண்டிலுமே மலை உச்சியிலிருந்து 360 பாகையில் காடச்களை பார்வையிட முடியும்.
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் என்பனவற்றை ரம்மியமான காட்சிகளை நாம் இங்கு காண முடியும்.
ரவணா எல்ல நீர் வீழ்ச்சியும் இந்த பகுதியில் அழகா காட்சியளிக்கும் இந்த மலையின் உயரம் 400 அடி என்ற போதிலும், எல்ல நகரிலிருந்து வெறும் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
ராவணன் குகை
எல்ல கற்பாறை மலைப் பாதையின் நடுப்பகுதி அளவில் இந்த ராவணன் குகை அமைந்துள்ளது.
எல்ல நகரில் இருந்து சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த குகை அமைந்துள்ளது.
நடந்து செல்வதானால் சுமார் ஒரு மணித்தியாலம் தேவைப்படும்.
இந்த குகை பகுதியை அடைவதற்கான படிகள் ராவணா விகாரையில் ஆரம்பமாகின்றது. சுமார் 1500 சதுர அடிகளை கொண்ட இந்த பகுதியில் சுமார் நான்கு ரகசிய குகைகள் காணப்படுகின்றன. இந்தக் குகைகளை பார்வையிட வேண்டுமாயின் குறைந்த பட்சம் மூன்று மின்விளக்குகள் தேவைப்படும்.
புலத்தி முனி ஓவியம்
ராவண மன்னனின் பாட்டனார் புலத்தி முனி என்னும் ரிசியின் உருவப்படம் ஒர் மலையில் காணப்படுகிறது.
எல்ல வெள்ளவாய வீதியின் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மலைப்பகுதி அமைந்துள்ளது. பாதையின் வளைவு அதாவது பாதைக்கு வலது பக்கத்தில் மேல் பகுதியில் அமைந்துள்ள கற்பாறை ஒன்றில் இந்த முகம் காணப்படுகிறது.
இந்த முகத்தை நன்றாக காண்பதென்றால் வளைவு பகுதியின் மத்திக்கு சென்று அதனை பார்வையிட வேண்டும். சுமார் நிலத்திலிருந்து 20 அடி உயரத்தில் இந்த முகம் பொறிக்கப்பட்ட கற்பகுதி காணப்படுகிறது. உருவப்படம் அளவில் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.
ராவணா நீர்வீழ்ச்சி
ராவணன் நீர்வீழ்ச்சி எல்ல நகரில் இருந்து சுமார் ஆறு தசம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பஸ் ஒன்றில் பயணம் செய்ய வேண்டுமாயின் சுமார் 15 எல்லது 20 நிமிடங்களில் குறித்த இடத்தை அடைய முடியும் இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் சுமார் 82 அடிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அழகிய பட்டாம்பூச்சிகள் ஊர்வன என்பனவற்றை ராவண எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் நீங்கள் பார்வையிடலாம்.
தெமோதர பாலம்
தெமோதர பாலம் அல்லது 9 ஆர்ட்ஸ் பிரிட்ஜ், ஆறுக்கு 9 பாலம் என இந்த பாலம் அடையாளப்படுத்தப்படுகிறது.
கும்பல் வலைக்கு சென்று பஸ் ஒன்றில் தேமோதர நோக்கி பயணம் செய்யும்போது இந்த அழகிய பாலத்தை நீங்கள் காண முடியும்.
இந்த பாலத்தின் நீளம் சுமார் மூன்று கிலோ மீட்டர் ஆகும். வெளிநாட்டுப் பயணிகள் பலர் தங்களது சமூக ஊடக வலையமைப்புக்களில் இந்த பாலத்தை பற்றிய புகைப்படங்களை பகிர்வதனை நாம் காண முடியும்.
தாமோதர ரயில் நிலையம்
ஆங்கிலேயே ஆட்சியாளர்களினால் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அழகிய தோற்றத்தைக் கொண்ட இந்த ரயில் நிலையம் எல்ல நகரிற்கு மிக அருகாமையில் காணப்படுகின்றது.
வெளிநாட்டுப் பிரஜைகளின் சொர்க்கபுரியான எல்ல பகுதிக்கு சென்றால் இந்த இடங்களை எல்லாம் கட்டாயம் ரசித்து விட்டு வாருங்கள்.