டாப் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்ட Forbes: இதில் ஆறு பெண்கள் மற்றும் 4 தமிழர்களா?
இந்திய அளவில் டாப் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ள நிலையில், 6 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
பிரபல Forbes பத்திரிக்கை வெளியிட்டுள்ள மில்லினியர் பட்டியலில், முகேஷ் அம்பானி 14வது ஆண்டாக, 92.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தினை பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் 74.8 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் கவுதம் அதானி பிடித்துள்ளார்.

தொடர்ந்து எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ஷல் நாடார் 31 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 3ம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்களின் பெயரும், 4 தமிழர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஆறு பெண் தொழிலதிபர்கள்
ஜிண்டால் குழுமத்தை சேர்ந்த சாவித்திரி ஜிண்டால் ரூ.13.46 லட்சம் கோடி சொத்து மதிப்பை பெற்று பெண்களில் முதல் இடத்தையும், பட்டியலில் 71வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இரண்டாவதாக ஹேவல்ஸ் இந்தியாவைச் சேர்ந்த வினோத் ராய் குப்தா(76)வும், மூன்றாவதாக மும்மையைச் சேர்ந்த மருந்து மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட்டின் லீனா திவாரி இடம்பெற்றுள்ளார்.


பைஜூஸ் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் நான்காவது இடத்தையும், பயோகானின் கிரண் மசும்தார் ஷா, பெண்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


டிராக்டர்கள் அண்ட் பார்ம் எக்விப்மென்ட் லிமிடெட் (TAFE) நிறுவனத்தின் உரிமையாளரான மல்லிகா சீனிவாசன் ஆறாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.

4 தமிழர்கள்
டாப் 100ல் மூன்றாவது இடத்தினைப் பிடித்த எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ஷிவ் நாடார் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவின் 41 வது பெரும் கோடீஸ்வரராக திகழ்கிறது தமிழகத்தைச் சேர்ந்த முருகப்பா குழுமம். இதன் தலைவரான எம்.எம்.முருகப்பன் இடம்பெற்றுள்ளார். இவர் 28 தொழில்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கலை சேர்ந்தவரான சந்திர மோகன், தமிழகத்தின் பிரபலனான அருண் ஐஸ் கிரீம் பிராண்டை தோற்றுவித்தவர். ஆரோக்யா, ஹட்சன் போன்ற பிராண்டுகளில் வெளிவரும் பால், தயிர் போன்ற பொருட்கள் சந்தையில் பிரபலமானதாக விளங்கி வருகிறது.
தென்னிந்தியாவில் பல்வேறு மொழிகளில் டிவி சேனல்கள், ரேடியோ, செய்தித்தாள்கள் நடத்தி வரும் சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன், இந்திய கோடீஸ்வரர்களின் டாப் 100 பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 2.75 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் கலாநிதி மாறன் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் 78வது இடத்தை பிடித்துள்ளார்.
‘பணக்காரர்’ என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு நம் அனைவருக்குமே ஆசைதான். ஆனால் பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? இதனை இங்கு காணலாம்.
தூண்டுதலைத் தாண்டுங்கள்
‘இது எனக்கு இப்போதே வேண்டும்’ என்ற ஆசைத் தூண்டுதலை உங்களால் புறக்கணிக்க முடிந்தால், பணம் சம்பாதித்தலில் உள்ள முதல் தடையை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்துக்கு பெரிதாகத் தோன்றினாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை எனில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.
நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சோதனையான காலத்தில் உதவும் அல்லது நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.
சிறந்தவராக மாற முயலுங்கள்
உங்கள் பணியில் அல்லது தொழிலில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள் என்றால், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும்.
விருப்பமானவற்றை இடைவிடாமல் செய்வதன் மூலம், சந்தேகங்கள், போராட்டங்கள், நிராகரிப்பு இன்றிச் சிறப்பான பலன்களைப் பெறமுடியும். நீங்கள் செய்வதைச் சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.
கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்
பணத்தைச் செலவழிக்கும்போது சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறீர்களா? உங்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை, தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவே. அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும், ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எளிய வாழ்க்கை எல்லோருக்கும் ஏற்றது.
தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தல், அடிக்கடி வெளியில் உணவருந்துவதைக் குறைத்தல், ஆடை, அணிகலன்களுக்கான செலவைக் கட்டுக்குள் வைத்தல் போன்றவை அதிகப் பணம் சேமிக்க வழிவகுக்கும்.
நிதித் திட்டமிடல் அவசியம்
பணத்தைச் சேமிக்கும், செலவழிக்கும் வழிகள் குறித்த நிதித் திட்டமிடல் முக்கியம். உங்கள் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம்தான் பணக்காரர் ஆகும் பயணம் தொடங்கும். நல்ல பொருளாதாரத் திட்டத்துக்கான முதல் அடி, சிறந்த நிதித் திட்டமிடல்தான்.
ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல் மற்றும் உங்களின் தேவைகள் மீதான செலவுகளை மாதமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்யவும், அதிகமாகச் சேமிக்கவும் உதவும். நமது வருமானம், செலவுகள் பற்றிய தெளிவான பார்வை நமக்கு இருந்தால், ‘பட்ஜெட்’டில் வராத தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எளிது.
முதலீட்டுக்கு முக்கியத்துவம்
பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறமை, அதிர்ஷ்டம், வாரிசுரிமை போன்றவற்றை மட்டும் பொறுத்ததல்ல. கையில் உள்ள பணத்தை தொடர்ந்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வருவதும் முக்கியம். வளமாக உள்ள பலரும் கூட சரியாக முதலீடு செய்யத் தெரியாமல் பணத்தை முடக்கிப் போட்டிருக்கிறார்கள் அல்லது தப்பான ஆலோசனைகளைக் கேட்டு தவறான முதலீடுகளில் பணத்தைப் போட்டு இழக்கிறார்கள்.
முதலீடு செய்வதற்கு பெருந்தொகை தேவை என்று எண்ணத் தேவையில்லை. சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப, எஸ்.ஐ.பி. எனப்படும் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் போன்றவற்றில் சிறுதொகையை தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலே நாளடைவில் பணக்காரர் ஆகிவிடலாம்.