மக்களிடம் தவறான செய்தியை கொண்டுவந்த பிரியங்கா: கண்டனத்தை தெரிவித்து வெளியேறிய அண்ணாச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரொமோ காட்சியில் பிக்பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்க்கினால் அனைவரின் சுயரூபமும் வெளியாகியுள்ளது.
இதில் முதலில் தாமரைக்கும், பிரியங்காவிற்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் தற்போது நிரூப், அண்ணாச்சி இருவருக்கும் இடையே சண்டை எழ ஆரம்பித்துள்ளது.
தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் பிரியங்கா நிரூப்பிடம் கேள்வி ஒன்றினை கேட்டதற்கு அவரது பதில் அண்ணாச்சி என்று கூறிய நிலையில், அண்ணாச்சி தனது பக்கம் நியாயத்தினை கூறியது இறுதியில் சண்டையில் முடிந்துள்ளது.
இல்லாத விடயத்தினை இருப்பதாக கூறி மக்களை குழப்ப நினைப்பதற்காக கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்வதாக இமான் கூறி வெளியேறியுள்ளார்.