தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த சிங்கப்பெண்: யார் அவர்?
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் செங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு மேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதார் 21 வயதேயான அனு.
குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பிஏ முடித்துள்ள அனுவின் இந்த வெற்றியை தமிழகமே உற்றுநோக்கியது.
அதுமட்டுமா, மிக குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வான பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய தந்தை கண்ணன், மூன்று முறை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக பதவிவகித்துள்ளார்.
இந்த முறையும் அவரே வெற்றி பெற வேண்டும் என ஊர் மக்கள் ஆசைப்பட்டனர், ஆனால் தேர்தல் ஆணையம் பெண்களுக்கென்று எங்கள் தொகுதியை ஒதுக்கிவிட்டது.
சிறுவயதில் இருந்தே என் தந்தை மக்களுக்கு செய்து வரும் உதவியை பார்த்தே வளர்ந்து வந்ததால் நான் போட்டியிட முடிவு செய்தேன்.
கிராம மக்கள் என் மீது அதீத அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ளனர், என்னை வெற்றி பெற செய்ததற்கு என்ன மாதிரியான கைமாறு செய்யப்போகிறேன் என தெரியவில்லை.
ஆனால் கிராமத்தின் வளர்ச்சிக்காக நிச்சயம் பாடுபடுவேன், முதல் வேலையாக எங்களது ஊருக்கு இ-சேவை மையத்தை தொடங்கப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமப்புற பெண்களுக்காக சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டமும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிய வகையில் கிடைக்க வழிவகை செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.