திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்படும் மகா தீபம்... நேரலை காட்சி இதோ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படும் காட்சியினை நேரலையாக மனிதன் தளத்தில் காணலாம்.
மகா தீபம்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளதுடன், இது பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்றது.
இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுடன், பூஜையிலும் கலந்து கொள்கின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வானது இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டதுடன், இதில் திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டுள்ளனர்.
மகா தீப ஏற்றிய பிறகு வீடுகளில் நாம் 27 நட்சத்திரங்கள் ஏற்று விளக்கு ஏற்றி வீடுகளை ஒளி நிரப்ப செய்ய வேண்டும். இதனால் நம் வீடுகளில் சூழ்ந்துள்ள எல்லா தீமைகளையும் விலகும். அப்படியாக திருவண்ணாமலையில் நடந்து கொண்டிருக்கும் இந்த மகா தீபத் திருவிழாவை ஐபிசி பக்தி சேனலின் நேரலைக் காட்சியினை நமது மனிதன் தளத்தில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |