வக்ரமடைந்த சனி - ஜூலை 12 முதல் இந்த 5 ராசிகளுக்கும் நல்ல காலம் பிறக்குது... யாருக்கு பண மூட்டை கிடைக்கும்?
சனி கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி வக்ர நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் 2022 ஜூலை 12 ஆம் தேதி வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து பயணிக்க ஆரம்பிப்பார்.
இரண்டரை ஆண்டுகள் கழித்து 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பத்திற்கு வந்த சனி, மீண்டும் மகரத்திற்கு சென்று பயணிக்கவுள்ளார்.
இப்படி மகர ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனி மகர ராசிக்கு செல்வது இந்த ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் மிகவும் சாதகமாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் பல விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சிம்மம்
மகர ராசிக்கு வக்ர நிலையில் செல்லும் சனியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. திடீர் பண அதிர்ஷ்டத்தை அலட்சியத்தால் விட்டுவிடாதீர்கள்.
கன்னி
வக்ர நிலையில் சனி மகர ராசியை அடைவதால் கன்னி ராசிக்காரர்கள் எதிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதோடு, சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் இருப்பதால், நற்பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். பணியிடத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக உண்டு.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நற்பலன்களை அள்ளி வழங்கப் போகிறார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் வேலையில் சில தடைகள் ஏற்பட்டாலும், அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.