முளைவிட்ட பின்பு இந்த காய்கறியை சாப்பிடாதீங்க... விஷமாகவும் மாறும் ஜாக்கிரதை
முளைவிட்ட பின்பு சாப்பிடக் கூடாத மூன்று காய்கறிகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
முளைகட்டிய காய்கறிகள்
முளைகட்டிய பயிர்வகைகள் ஆரோக்கியமானது. பச்சைப் பயிறு, கொண்டக் கடலை போன்றவை முளைகட்டிய பின் சாப்பிட்டால் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக கிடைக்கும்.
நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகமாக காணப்படுவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தையும் அதிகரிக்கின்றது.
மேலும் இவற்றில் குறைந்த கலோரிகளும், அதிக புரதச்சத்தும் காணப்படுவதால், எடையை குறைக்க நினைப்பவர்கள் முளைகட்டிய தானியங்களை தாராளமாக எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால் சில முளைகட்டிய காய்கறிகள் நமக்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்திவிடும். அது என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உருளைக்கிழங்கு
மிகவும் சீக்கிரம் கெடாத காய்கறிகளில் ஒன்றாக இருக்கும் உருளைக்கிழங்கு, நாட்கள் செல்ல செல்ல முளைத்துவிடுமாம். முளைவிட்ட உருளையில் கிளைகோல்கலாய்டுகள் காணப்படும்.
இது ஸ்லோ பாய்சனைப் போன்தாகும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பிரச்சனைகள் மட்டுமின்றி சில தருணங்களில் நரம்பியல் பிரச்சினைகள் கூட ஏற்படலாம்.
வெங்காயம்
இதே போன்று வெங்காயமும் முளைவிட ஆரம்பித்துவிடும். இவ்வாறு முளைத்திருக்கும் வெங்காயத்தில் ஆல்கலாய்டுகள் அதிகமாக உற்பத்தியாகும்.
அதிலும் என் புரோபைல் டை சல்பைடை உற்பத்தி செய்வதால் ரத்த சிவப்பணுக்கள் சேதமாகிவிடும். ரத்த சோகை, வாந்தி, குமட்டல், வயிறு வலி, வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும்.
பூண்டு
மேலும் முளைக்கட்டிய பூண்டுகளை ஒருபோதும் உண்ணக் கூடாது. வெங்காயத்தில் இருப்பது போல பூண்டிலும் அதிகளவு சல்பர் இருக்கும்.
இவை ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்வதால் இரைப்பை குடல் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ரத்த சிவப்பணுக்களையும் பாதிக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
