Chanakya: மற்றவர்கள் உயிரோடு விளையாடும் 4 நபர்கள் -இவங்ககிட்டேயே போகாதீங்க
பண்டைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களில் இராஜதந்திரியாக இருந்தவர் தான் சாணக்கியர். இவருடைய கொள்ளைகள் எப்போதும் மனித வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டதாகவே இருக்கும்.
இதனால் இவருடைய கொள்கைகளை தொகுத்து சாணக்கிய நீதி என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. அந்த நூலில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்களை மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதனாக பிறந்த ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்த தேவையான மதம், தர்மம், கர்மம், பாவம் மற்றும் புண்ணியங்கள் என்பவற்றை அவர் மொழி நடையில் கூறியுள்ளார்.
அந்த வகையில் மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்போம். அதற்கான வழியை சாணக்கியர் ஆயத்தப்படுத்தப்படுத்தி கொடுத்துள்ளார்.
சாணக்கிய கொள்கைப்படி, வாழ்க்கையில் வெற்றிப் பெற நினைப்பவர்கள் சிலரிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியாயின், மற்றவர்களின் உயிருடன் விளையாடும் பழக்கம் கொண்டவர் நபர்களை எப்படி இனங்காணலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
உயிருடன் விளையாடும் நபர்கள்
கவனம் இல்லாதவர்கள் | மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக நீர் மற்றும் தண்ணீர் உள்ளது. இது இரண்டையும் சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியாளனாக மாறுகிறார்கள். நீர் மற்றும் நெருப்பில் எப்போதும் கவனம் இல்லாமல் இருப்பவர்களை பக்கத்தில் வைத்து கொண்டால் அது சில சமயங்களில் நமது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். |
விலங்கு குணம் உள்ளவர்கள் | சிங்கம், கரடி மற்றும் புலி போன்ற ஆபத்தான விலங்குகளிடம் சற்று விலகி இருப்பது நல்லது. சிலர் இது போன்ற ஆபத்தான விலங்குகளை செல்லபிராணிகளாக வளர்ப்பார்கள். என்ன தான் நண்பனாக பழகி வந்தாலும், இந்த விலங்குகள் உயிரை எடுக்கும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். சிலருக்கு இந்த விலங்குகள் போன்று மிருக குணமுள்ளவர்கள் நமது வாழ்க்கையிலும் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நமது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். |
கெட்ட சகவாசம் உள்ளவர்கள் | ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்களுடன் பழக்கம் வைத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்றவர்களிடம் பழக்கம் வைத்து கொள்ளும் பொழுது அது ஆபத்தை ஏற்படுத்தும். அத்துடன் எதிர்காலம் குறித்து நிறைய எதிர்பார்ப்பவர்களிடம் இருந்து சற்று கவனமாக இருந்தால் வாழ்வில் வெற்றிப் பெறலாம். |
சோம்பேறிகள் | எப்போதும் சோம்பேறிகளை சற்று தொலைவில் வைத்து பார்க்க வேண்டும். ஏனெனின் இவர்களிடம் உள்ள சோம்பேறித்தனம் சில சமயங்களில் உங்களுக்கு வரலாம். அவர்களுக்கும் வெற்றிக்கும் அவர்களுக்கு ரொம்ப தூரமாக இருக்கும். நீங்கள் பழக ஆரம்பித்து கொஞ்ச நாட்களில் உங்களின் கனவுகளை அழித்து விடுவார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
