Chanakya Niti: ஆயுளை குறைக்கும் இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா?
சாணக்கிய நீதியின் படி உங்களது ஆயுளை குறைக்கும் குணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாணக்கிய நீதி
சாணக்கியர் கி.மு 300ம் காலக்கட்டத்தில் வாழ்ந்த ஆசிரியர், எழுத்தாளர், பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி என பல பரிமானங்களைக் கொண்டவர் கூறிய சில பொன்மொழிகள் தான் சாணக்கியரின் நீதி என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நீதியில் ஒரு மனிதனின் வாழ்க்கை முறையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் குறித்து தத்துவங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி எந்தமாதிரியான குணங்கள் கொண்டவர்களின் ஆயுள் காலம் குறைவு என்பதை சாணக்கியர் நீதியில் கூறப்பட்டுள்ளதை தெரிந்து கொள்வோம்.

ஆயுளை குறைக்கும் குணங்கள்
சிற்றின்பத்தின் மீது அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆயுள் காலம் குறைவாக இருக்குமாம். ஏனெனில் இவற்றின் மீது உள்ள நாட்டம் ஒருவரின் உடலை சிதைத்து, வலுவிழக்க செய்கின்றது. இந்த செயல்களில் ஈடுபடும் போது ஒருவரின் உயிர் சக்தி வீணாகுமாம்.
அதே போன்று அளவிற்கு அதிகமான கர்வம் ஒருவரின் ஆயுளை குறைக்குமாம். பிறரிடம் குறைகளையும், தன்னிடம் நல்ல பண்புகளையும் காண்பவர்கள் கர்வத்திற்கு ஆளாகின்றனர். மற்றவர்களை விட தான் வலிமையாகவும், புத்திசாலியாகவும் இருக்கின்றோம் என்று கர்வத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையை இழக்கின்றார்களாம். தன்னை ஒருவர் புகழ்வதை உலகம் விரும்பாது.

தேவையில்லாமல் அதிகமாக பேசுபவர்களின் ஆயுள் வேகமாக குறைகின்றதாம். இவர்கள் அதிகமாக பேசுவதில் ஆர்வமாக இருக்கும் நிலையில், உண்மையை பேச முடியாதாம். அதிகமான தீய விளைவுகளை தரும் செயல்களிலுமு் ஈடுபடுவார்கள். இவ்வாறு செல்வதால் இவர்களின் புத்திசாலித்தனம் படிப்படியாக குறைய தொடங்குமாம்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மனிதர்களும் மிகவும் அவசியம் ஆகும். இவ்வாறான தன்மை இல்லாதவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலைப்பதில்லை. மேலும் இவர்களின் ஆயுள் காலமும் குறைவாக இருக்குமாம். விட்டுக்கொடுத்து வாழ்பவர்களின் வாழ்க்கை அமைதியாகவும், ஆயுளும் அதிகரிக்குமாம்.

கோபம் ஒரு நபரின் மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றது. அதிகமாக போபப்படுபவர்களின் ஆயுள் குறைவாக இருக்குமாம். ஒருவர் கோபத்தில் செய்யும் செயல் பிற்காலத்தில் வருத்தத்தில் தள்ளப்படுமாம். கோபத்தினால் தனக்குத்தானே தீங்கு விளைவித்து கொள்வதுடன், தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்தினை ஏற்படுத்துமாம். கோபம் நகரத்தின் நுழைவாயில் என்று கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |