சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா?
சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணம் உண்டு. அந்த வகையில் சிறிய காரியத்தை கூட மிகப்பெரியதாக விளம்பரப்படுத்துபவர்களும் உள்ளனர்.
ஆனால் சில ராசியினர் எவ்வளவு பெரிய காரியம் என்றாலும் அதனை ஆரவாரப்படுத்தவே மாட்டார்கள். அதனை வெளியே காட்டாமல், அமைதியாக சாதனை படைப்பார்கள்.
அதாவது பதுங்கி பாயும் புலி போன்று பல நபர்கள் சரியான நேரம் வரும் போதுதான் தனது விஸ்வரூபத்தினைக் காட்டி எதிரிகளைத் திணறடிக்கும் ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
விடாமுயற்சியின் சிகரமாக இருக்கும் ரிஷப ராசியினர் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள். வெளித்தோற்றத்திற்கு மிகவும் அமைதியானவராகவும், மென்மையானவராகவும் இருப்பார்கள்.
இவர்களிடம் எவ்விதமான வீண் ஆரவாரமும் காட்டாமல், மனஉறுதிக்கு இவர்களுக்கு இமயநிலைக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.
ஜோதிடத்தில் ரிஷபம் என்பது ஒரு ஸ்திர ராசி மற்றும் நில தத்துவம் கொண்டதாகும். பொறுமை, நிதானம் இவர்களிடம் அதிகமாக இருப்பதுடன், இலக்கை நோக்கி இவர்கள் ஆமை வேகத்தில் செல்வது போன்று தெரிந்தாலும் முடிவில் கில்லியாக இருப்பார்கள்.
எந்தவொரு பின்னடைவிலும் சோர்ந்து போகாத இவர்கள், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தையும், சொத்துக்களையும் சேர்த்து கம்பீரமாக நிற்பார்கள்.

கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் உணர்ச்சிப்பூர்வமான வியூகவாதியாகவும், மென்மையான இதயம் படைத்தவராகவும், உணர்ச்சிவசப்படுத்துபவராகவும் இருப்பதுடன், அசாத்திய நிர்வாக திறமையை கொண்டுள்ளதுடன், ரகசியங்களை காக்கும் குணம் கொண்டவர்கள்.
கடகம் என்பது சர ராசி மற்றும் நீர் தத்துவம் கொண்டது ஆகும். நீர் எப்படி பாறை இடுக்கிலும் தனக்கான வழியை கண்டுபிடிக்குமோ, அதே போன்று தனது தடைகளை தாண்டி செல்வார்களாம்.
அதுமட்டுமின்றி நண்டு எவ்வாறு தனது இரையை கவ்விப் பிடிக்குமோ, அதே போன்று தொழில் மற்றும் வியாபார உத்திகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.
இவர்களின் மனநிலையில் என்ன இருக்கின்றது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எந்த நேரத்தில் எந்த காரியத்தை செய்ய வேண்டும் என்ற தெளிவு இவர்களிடம் இருக்குமாம்.

துலாம்
சுக்கிரனின் மற்றொரு வீடான துலாம் ராசியினர் தந்திரமான ராஜதந்திரிகளாக இருப்பார்கள். தராசை குறியீடாக வைத்திருக்கும் இவர்கள் சண்டை, வீண் விவாதத்தினை விரும்புவதில்லை.
எந்த சூழ்நிலையையும் புன்னகையுடனும், அமைதியுடனும் எதிர்கொள்ளும் இவர்களின் வியூகம் வேறு மாதிரியாக இருக்குமாம். துலாம் என்பது காற்று தத்துவம் கொண்ட ராசியாகும். இனிமையான பேச்சு மற்றும் நிதானம் இவர்களின் மிகப்பெரிய ஆயுதம் ஆகும்.
ஒரு காரியத்தை முடிக்க வேண்டுமென்றால் காரியத்தை அமைதியாக இருந்து சாதிப்பார்கள். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பலவீனங்களை ஒருபோதும் வெளியில் காட்டிக் கொள்ளாத இவர்கள் எந்தவொரு போட்டியிலும், நேரடியாக மோதாமல் ராஜதந்திரமாக செயல்பட்டு காய் நகர்த்துவார்கள்.
இறுதி போட்டியில் எதிர்பாராத நேரத்தில் முதலிடத்தினை பிடித்து ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்கள்.

தனுசு
நவகிரகங்களின் குருவான வியாழனை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் இலக்கை நோக்கி செயல்படுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
பார்ப்பதற்கு கலகலப்பாகவும், விளையாட்டாகவும் இருப்பது போன்று தோன்றும் இவர்களின் கவனம் எப்பொழுதும் இலக்கின் மீதுதான் இருக்குமாம்.
தனுசு என்பது உபய ராசி மற்றும் நெருப்பு தத்துவம் கொண்டதுடன், அசாத்தியமான அறிவுக்கூர்மை மற்றும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தேவையற்ற விடயங்களில் தங்களது ஆற்றலை வீணடிக்காத இவர்கள், தங்களது அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்வதில் தீவிரமாக இருப்பார்கள்.
தாங்கள் நினைத்த காரியத்தை சரியான தருணத்தில் கச்சிதமாக செய்து முடிக்கும் இவர்களின் வெற்றி என்பது திடீரென தோன்றும் வானத்து நட்சத்திரம் போன்று பிரகாசமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |