இளம் வயதில் மாரடைப்பு வர காரணம் என்ன தெரியுமா?
இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மாரடைப்பு
இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே மாடைப்பு ஏற்பட்டது.
தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையாகும்.

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முக்கிய மற்றும் முதன்மையான காரணமாக பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் பொரித்த, ஜங்க் புட், ஃபாஸ்ட் புட் இவைகள் நாவிற்கு ருசியாக இருந்தாலும் ரத்த குழாய்களில் கொழுப்பாக படிந்துவிடுகின்றது.
இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, இறுதியில் உயிரை பறிக்கும் மாரடைப்பு அபாயம் ஏற்படுகின்றது. இளம் வயதிவே மாரடைப்பு வரதற்கான காரணம் என்ன என்று இங்கு கீழே காணலாம்.
தூக்கமின்மை:
போதுமான தூக்கம் இல்லாத காரணத்தினால் கூட மாரடைப்பு ஏற்படலாம். ஒரு மனிதனுக்கு சரா சரியான தூக்க நேரமான 8 மனி நேரத்தை விட குறைவாக தூங்கினால் இது மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கிறது. இதனால் இது நம் இதய துடிப்பை நிலைக்குலைய வைக்கிறது. இதனால் போதுமான அளவு தூங்குவது நல்லது.
புகைப்பிடித்தல் - மதுப்பழக்கம்
ஒரு சில பேருக்கு புகைப்பிடித்தல் அல்லது மது பழக்கத்தினால் கூட மாரடைப்பு ஏற்படலாம். இவை இரண்டையும் அளவுக்கு அதிகமாக எடுத்தால் நம் இரத்த நாளங்கள் சுருங்குகின்றது. இது இதய நோய்க்கு வழிவகுக்கிறது. எனவே இவற்றை விட்டுவிட்டால் இது நம் உடலுக்கு எந்தவொரு பாதிப்பையும் தராது.“

வேலை அழுத்தம்:
மன அழுத்தத்தால் கூட மாரடைப்பு ஏற்படுமாம். இந்த காலகட்டத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருப்பதால் நம்மில் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். இந்த மன அழுத்தம் இதய நோய்க்கு வழி வகுக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இது நம் இதய துடிப்பை சரியான அளவை விட அதிகமான அளவுக்கு அதிகரிக்கிறது.மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளான உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம்.
மோசமான உணவுமுறை:
உணவுமுறையினால் கூட பாதிப்பு வரலாம். நம் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளான இறைச்சிகள் மற்றும் துரித உணவுகள் போன்றவைகள் கொழுப்பை அதிகரித்து இரத்த நாளங்களை அடைக்கிறது. இதுதான் மாரடைப்பு வர முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இதை செய்தால் நாம் இதய நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

பரம்பரை:
அது மட்டுமின்றி நம் குடும்பத்தில் மாரடைப்பு இருந்தாலே இது நமக்கும் வரும் அபாயம் உள்ளது. இதனால் நம் குடும்பத்தாருக்கும் இதய நோய் இருக்கிதா என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |