இறுதி வரை கைகூடாமல் போன விவேக்கின் ஆசைகள்! கதறும் ரசிகர்கள்.... கல் நெஞ்சையும் கரைய வைக்கும் மறுபக்கம்!
தமிழ் மக்களை தனது அசாத்திய நகைச்சுவையால் சிரிக்க வைத்த நடிகர் விவேக்கிற்கு அவரது ஆசைகள் இறுதிவரை நிறைவேறாமல் போயுள்ளது.
ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை நடிகராக தன்னுடைய ஆளுமையைக் நிலை நிறுத்தி வந்தவர் நடிகர் விவேக்.
தமிழ் திரைப்படத் துறையில் 'சின்னக் கலைவாணர்' என அழைக்கப்படும் விவேக், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை புகுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமின்றி, சிந்திக்கவும் வைத்தவர்.
அனைத்து முன்னணி நடிகர்களுடனும், புதிய நடிகர்களுடனும் நடித்துவிட்ட விவேக்கிற்கு திரைத்துறைக்கு வந்த நாளிலிருந்தே கமலுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் எனும் ஆசை இருந்து வந்தது.
ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் 'இந்தியன் 2' தொடங்கப்பட்டது. 'என்னுடைய நீண்டகாலக் கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது.
அந்தக் கனவு 'இந்தியன் 2' வின் மூலமாக நனவாகப் போகிறது. அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன்' என்று தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக்க வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார் அந்த ஆசை நிறைவேற வில்லை.
அவரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கு மாத்திரம் இல்லை கமலுக்கும் பேரதிர்ச்சியே.. இதற்கிடையே, அவர் சினிமாவில் இயக்குநராக சில திரைப்படங்களை இயக்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், அதுவும் நிறைவேறவில்லை. இறுதியாக, தன் வாழ்நாளில் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு பயணித்துக் கொண்டிருந்தவர், தற்போது வரை 33 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.
1 கோடி மரங்களை நட வேண்டும் என்ற அவரது ஆசை அவருக்கு கைகூடாமல் போய்விட்டது.