ஆண்களைவிட பெண்களை அதிகமாக தாக்கும் நோய் எது தெரியுமா? உயிரை பறிக்கும்... எச்சரிக்கை
சிருநீரகம் உடலில் உள்ள சிறு நீரை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் , ரத்த அழுத்ததை சமச்சீராக வைத்திருப்பது, உடம்பிற்கு தேவையான தாதுக்களான சோடியம், பொட்டாசியம், கல்சியம் போன்றவற்றை சமச்சீராக பேணுவது போன்ற செயல்களை நம் உடலில் செய்கின்றது.
நம் உடம்பில் ஒன்றிற்கு இரண்டாக சிறுநீரகங்கள் இருப்பதால், ஒன்று பழுதடைந்தாலும் மற்றொன்று அதன் வேலையை சேர்த்து செய்யும்.
அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பது எமது கடமையாகும்.
பெரும்பாலும் சிறுநீரக நோய்கள் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும் சிறுநீரக நோய்கள் பெண்களைதான் அதிகமாக பாதிக்கின்றன.
பெண்ணின் ரகசிய பகுதி ஒரு மெல்லிய சவ்வு போன்ற பகுதியால் மூடப்பட்டிருக்கும்.
இந்த சவ்வு பகுதியானது உடலுறவின் போது கிழிக்கப்பட்டுவிடும். இதனால் அருகில் உள்ள சிறுநீர் பாதை வழியாக நோய்கிருமிகள் சிறுநீர் பையினுள் நுழைந்துவிடும்.
இதுதவிர கருத்தடை சாதனக்கள் பயன்படுத்துவோரிற்கும் இந்த நோய்தொற்று ஏற்படும்.
முன்னதாக இயற்கையான போர்வீரரகளாக செயல்படும் பக்டீரியாக்களை அழித்துவிட்டுதான் இந்த நோய்கிருமிகள் வளரும்.
அதாவது கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும்போது நன்மை தரும் பக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.
இது தவிர பள்ளி கல்லூரிகளிற்கு செல்லும் மாணவிகள் , வேலைக்கு செல்லும் பெண்கள், கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் உள்ள பெண்களிற்கும் சிறிநீர் தொற்று நோய் ஏற்படுவது ஆண்களைவிட அதிகம்.
அதோடு இயற்கை உடல் உபாதைகள், மாதவிடாய், பிரசவம் போன்ற காரணங்களாலும் பெண்களிற்கு இந்த நோய் ஏற்படுகின்றது.
இந்த நோய்தொற்றை அலட்சியம் செய்தால் , அது நிரந்தரமாக சிறுநீரகங்களை செயலிழப்பில் கொண்டுபோய்விடக்கூடிய அபாயமும் உள்ளது. சில வேலைகளில் உயிருக்கு கூட ஆபத்தினை ஏற்படுத்தும்.
குறிப்பு
- இதனை முன்கூட்டியே தடுக்கவேண்டும் எனில் போதுமான அளவும் தண்ணீர் குடிக்கவேண்டும்.
- சுயமருந்துகள், வலிநிவாரணிகள், பெயர்தெரியாத நாட்டு மருந்துகள் என எதையும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடகூடாது.
- குடிப்பழக்கம் , புகை பழக்கம் இருந்தால் அதை தவிர்க்கவேண்டும்.
-
சைவ உணவுகள் நல்லது, அளவான அசைவ உணவுகள் நல்லது.