பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது? விசித்திரமான விபரம் இதோ
நாம் வாழும் பூமியின் மையத்தில் உள்ள நாடும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பூமி மையத்தில் உள்ள நாடு
நாம் இந்த பூமியில் மிகவும் சுதந்திரமாக வாழ்கின்றோம். புவி கோளமாக இருக்கிறது எனவே மையம் இருக்கும் ஆனால் அந்த மையத்தில் என்ன நாடு இருக்கிறது என்பது தெரியுமா?
அதை எப்போதாவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா?அப்படி இதுவரை இந்த விடயத்தை பற்றி ஆராயாதவர்கள் இதில் விபரத்தை படித்து பாருங்கள்.
பூமியின் மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. அதற்கு அருகில் கானா தகோராடி எனும் நகரம் உள்ளது. கானா ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாகும்.

ஆப்ரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதனடிப்படையில் பூமியின் மையத்தில் கானா நாடு 380 மைல் தொலைவில் உள்ளது.
இந்த நாட்டில் வளிமண்டலம் முற்றிலும் வேறுபட்டதாக காணப்படும். மற்றைய நாடுகளை விட இங்கு அதிக வெப்பம் இருக்கும். மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் கூட செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டில் தங்கச் சுரங்கங்கள் அதிகமாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்காக போர்ச்சுகீசியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பல போர்கள் நடந்ததாகவும் வரலாறு உண்டு.

இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்குமாம். கானா மனிதனால் உருவாக்கப்பட்ட வோல்டா ஏரியின் தாயகமாகும்.
இந்த ஏரி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரியாகும். உலகின் 4 ஆவது மிகப்பெரிய ஏரியாகும். நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்த ஏரி முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். மேற்கு ஆப்ரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை நாடாக இந்நாடு கருதப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |