பிக்பாஸ் வீட்டிலிருந்து போன் செய்து தாமரை கூறிய ஒற்றை வார்த்தை: தங்கை பகிர்ந்த பல உண்மைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தாமரை வெளியேறியது அனைவருக்கும் வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக தாமரையின் சிறு சிறு அசைவுகளைக் கூட ரசிகர்கள் பிரபலமாக்கி வருகின்றனர்.
மேலும் தாமரை வெறுங்கையோடு வெளியேறாமல் அந்த பணத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறி இருந்தால் ரசிகர்கள் இன்னும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள்.
ஆம் சிபி எவ்வளவோ கேட்டும் பணத்தினை எடுத்துக்கொள்ளாத தாமரையினை மூளைச்சலவை செய்தவர் நிரூப்.
இந்நிலையில் தாமரை வெற்றி பெறுவார் என்று காத்திருந்த அவரது ஊர் மக்கள், உறவினர்கள் பெரும் கஷ்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தாமரையின் தங்கை விஜயலட்சுமி கூறிய சில தகவல்கள் அனைவரையும் வருத்தப்பட வைத்துள்ளது.

விஜயலட்சுமி கூறுகையில், அக்காவிற்கும், எனக்கு ஒன்பது வயது வித்தியாசம். அக்கா நாடகத்திற்கு போகிறதால் அவ்வளவாக வீட்டிற்கு வர மாட்டாங்க... ஆனால் வீட்டில் வரும் போதெல்லாம் நல்லா படிக்கனும் பாப்பா என்றே கூறுவார்.
தனக்கு மூன்று அக்கா, ஒரு அண்ணன்... இதில் தாமரை அக்கா இரண்டாவது... பிக்பாஸ் போகும் முன்பு வீட்டிற்கு வந்து சொல்லிட்டு போனாங்க....
தனது வீட்டில் இருந்த டிவி கஜா புயலில் போயிடுச்சி... அதன் பின்பு சரிபண்ணாமல் அப்படியே போட்டுவிட்டோம்.. இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியினை பார்த்தது கூட இல்லை.
பின்பு தற்போது தாமரை அக்கா பிக்பாஸ் வீட்டிற்குள் போறாங்கனு அண்ணன் தான் டிவியை சரிசெய்து கொண்டு வந்தாங்க...
அக்கா பிக்பாஸ் வீட்டிற்குள் போனதிலிருந்து வெளியே வந்தது வரைக்கும் அனைத்து நாட்கள் நிகழ்ச்சியினையும் தவறாமல் பார்த்தோம்...

மேலும் அக்கா ஜெயிப்பாங்கனு நாங்க மட்டும் இல்லை எங்களது ஊரே நம்பி இருந்த நிலையில், தற்போது அக்கா வெளியேறியது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறினார்.
மேலும் அவர் அவ்வாறு கூறியதற்கு காரணம் என்னவெனில், நான் கண்டிப்பா ஜெயிச்சிட்டு தான் வருவேன் என்ற தாமரையின் உறுதியாக பேச்சு. மேலும் இதுவரை சிரிப்பையே பார்க்காத அக்கா முகத்தில் தற்போது தான் சிரிப்பினை பார்க்கிறேன் என்றும் தனது வீட்டில் இருக்கும் கஷ்டத்தனை எப்பொழுதும் யாரும் வெளிக்காட்டுவதில்லை என்று கூறினார்.
மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கும் இவரது வீடு மழை பெய்தால், கூரை ஊறிவிடுவதால், பக்கத்தில் இருக்கும் பள்ளியில் தான் போய் தங்குவார்களாம். மேலும் சுற்றி எந்தவொரு தடுப்பும் இல்லாததால் அடிக்கடி பாம்பு வந்து செல்வது மட்டுமின்றி, பாத்ரூம் போக வேண்டுமென்றால் விடியும் முன்பு காட்டுக்குள் சென்று, வரும் போது குளித்துவிட்டு வந்துவிடுவதாக கூறியுள்ளார்.

பிறந்ததிதிலிருந்து இவ்வாறு வாழ்ந்து வருவதால் எங்களுக்கு கஷ்டம் என்று எதுவும் இல்லை என்றும், நான் வேலைக்கு செல்கிறேன் என்றாலும் அண்ணன் வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது அண்ணன் உழைப்பு மட்டுமே எங்களுக்கு வருமானம்.
நான் பி.எட் படித்துக்கொண்டிருக்கிறேன் என்றும், இந்தி மற்றும் பியூட்டிஷன் முடிச்சிருப்பதால், அக்கம் பக்கத்தில் இருக்கும் பசங்களுக்கு இந்தி சொல்லி கொடுப்பதாகவும் சிரிப்புடன் கூறியுள்ளார்.
தாமரை பிக்பாஸ் வீட்டிலிருந்து போன் செய்து அண்ணனுடன் பேசியதாகவும், தான் நன்றாக இருப்பதாகவும், பிக்பாஸ் முடிந்து வந்த பின்பு கண்டிப்பா ஒரு வீடு கட்டி கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தங்கை கூறுகையில், அக்காவிற்கு ஏற்கனவே ஏகப்பட்ட கடன் இருப்பதாகவும், ஆனால் அக்கா இவ்வாறு கூறியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி என்றும், ஆனால் இதனை அக்காவிடம் தாங்கள் எதிர்பார்க்கவில்லை.... அக்கா கூறிய ஒற்றை வார்த்தையே போதும் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
