பேய்களால் கட்டப்பட்ட கோவில்! தீராத ஆசையால் இறந்த மன்னன்.. வரலாறு இதோ
இந்தியாவில் இருக்கும் ஒரு சிவன் கோயில், பேய்களால் கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி பின்னணி காரணத்தை பதிவில் பார்க்கலாம்.

கக்கன்மாத் சிவன் கோவில்
இந்தியாவில் பல தெருவுக்கு ஒரு கோவில் இருப்பது வழக்கம். அங்கு இருக்கும் இருக்கும் ஒவ்வொரு கோவில்களும் மிகவும் பழமை வாய்ந்தது.
இனைத்து கோவில்களுககு பின்னும் ஒரு முக்கியமான பின்னணி இருக்கும்.
அந்த வகையில் கக்கன்மாத் சிவன் கோவில். இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பல வரலாறுகள் கூறப்படுகின்றது. இதாவது நாம் இப்போது இருப்பதில் இருந்து சுமார் 1000 வருடங்களுககு முன்னர் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

பேய்களால் கட்டப்பட்ட கோவில்?
கக்கன்மாத் கோவில், மத்தியபிரதேசத்தில் குவாலியர் நகரத்தில் இருந்து, சுமார் 65 கி.மீ தொலைவில் இருக்கும் சிஹோனியாவில் அமைந்திருக்கும் கோவில் ஆகும்.
இது பல சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் ஒரு கோவிலாக தற்போது மாறி உள்ளது.
இக்கோவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க காரணம் இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் எனப்படுகின்றது.
இந்த கோவிலானது, தரையிலிருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்திருக்கிறதாம்.

இதனை, பலரும் புனித ஆலயம் எனக்கூறுவதை விட, மர்மக்கோவில் என்றே கூறுகின்றனர்.
இந்த கோவில் அறிவியலையே குழப்பி உள்ளது. காரணம்
எந்த கோவிலாக இருந்தாலும், கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதில் இருக்கும் சந்துக்கள் பூசிதான் கட்டப்படும். ஆனால், இக்கோவில் மட்டும் கற்களால் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது.

இதில், சுண்ணாம்பு, சிமெண்ட் என எதுவுமே உபயோகிக்கப்படவில்லை. ஒரு கல்லின் மேல் இன்னொரு கல்லை அடுக்கி இந்த கோவிலை கட்டி உள்ளனர்.
இது தான் இந்த கோவிலின் மர்மம். ஒரு கல்லின் மீது ஒரு கல்லாக வைத்து கட்டப்பட்ட இந்த கோவில் எந்த வித கலவையும் பயன்படவில்லை.
சில நேரம் நாம் ஒரு கல்லை எடுத்தால் கூட மொத்த கோவிலும் இடிந்து விழும். இப்படி இருக்கும் போது சுமார் 1000 வருடங்கள் புயல் வந்திருக்கும் பல இயற்கை அனர்த்தங்கள் வந்திரும் அதற்கெல்லாம் இந்த கோவில் ஒன்றும் ஆகவில்லை.
பல ஆராய்ச்சிகள் செய்து கூட இந்த கோவில் எப்படி இப்படி கற்களால் அடுக்கி கட்டப்பட்டும் கூட இவ்வளவு காலம் நிலையாக இருக்கிறது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பி உள்ளனர்.
இலக்கிய வரலாற்றின்படி ஒரு மன்னன் இருந்ததாகவும் அவன் தனது மனைவிக்காக இறந்த ஆதமாக்களை ஏவி அந்த ஆத்மாக்களிடம் ஒரு கோவில் கட்டி தர சொல்லி கேட்டாராம்.
அந்த ஆன்மாக்களும் நாங்கள் கட்டி தருகிறோம் ஆனால் நாங்கள் செய்யும் வேலையை மனிதர்கள் பார்க்கக்கூடாது அப்படி பார்த்தால் நாங்கள் பணிணை தொடர மாட்டோம் என ஆத்மாக்கள் கூறியதாம்.
மன்னனும் ஆத்மாக்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த பக்கம் இருந்த மக்களை அப்புறப்படுத்த ஒருவன் மட்டும் மன்னன் ஏன் இப்படி செய்கிறார் என சந்தேகப்பட்டு ஒளிந்திருந்து அந்த இடத்தை பார்த்தானாம்.
அப்படி பார்க்கும் போது அவன் பலநநூறு மைல்கள் தொலைவில் இருந்து கற்கள் வானத்தில் பறந்து வந்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கபட்டு கட்டப்பட்டதாக அவன் கூறினான். இது வரலாற்று கதையாக மாறி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |