விஜய் டிவி பிரபலம் மரணம்- உடைந்து போன ஜாக்குலின் உருக்கமான கோரிக்கை
விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த குட்டி ரமேஷ் மறைவையடுத்து இரங்கல் தெரிவித்துள்ள ஜாக்குலின், அவர் தொடர்பாக தன்னை யாரும் பேட்டிக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தேன்மொழி பி.ஏ தொடரில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வந்த குட்டி ரமேஷ், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மாரடைப்பால் காலமானார்.
அவரின் மறைவு செய்தி தேன்மொழி பி.ஏ சீரியல் குழுவினர் மட்டுமல்லாது விஜய் டிவி குடும்பம் மற்றும் சின்னத்திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தனக்கு அப்பாவாக நடித்த குட்டி ரமேஷின் மறைவால் அதிர்ச்சியடைந்துள்ள ஜாக்குலின், மிகவும் சோகமாக இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், அப்பா குட்டி ரமேஷ் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். "நல்ல மனிதராகவும், அப்பாவாகவும் இருந்த நீங்கள், தற்போது இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
உங்களை நான் மிஸ் செய்வேன், எனக்கும் அப்பாகளுக்கும் ராசி இல்லை" என சோகமாக ஜாக்குலின் கூறியுள்ளார்.
மேலும், அவர் தொடர்பாக தன்னை யாரும் பேட்டிக்கு அழைக்க வேண்டாம் எனவும் மீடியாக்களிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.