அந்த பிசாசை சேர்த்துக் கொள்ளுங்கள்! இருபது நாட்கள் கழித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு அர்ச்சனாவின் முதல் பதிவு!
மூளையில் ஆபரேஷன் செய்த பின்னர் வீடு திரும்பிய வி.ஜே.அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர், மூளையில் ஏற்பட்ட பிரச்னையால் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் அர்ச்சனா.
இதனால் சில நாட்கள் சுய நினைவை இழந்திருந்தார்.
பின்னர் சர்ஜரி முடிந்து வீல் சேரில் வீட்டுக்கு வந்தார் அர்ச்சனா.
இந்நிலையில் இருபது நாட்கள் கழித்து தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கடைசியாக அர்ச்சனா அறுவை சிகிச்சைக்கு முன்பு பதிவிட்டிருந்தார். ”ஒரு அறுவைசிகிச்சை உங்களை வீழ்த்தும் போது, உங்கள் மகள் இன்னும் உங்களிடம் சொல்கிறாள், “நீங்கள் ஒரு ராக்ஸ்டார்... உம்மா” என்று. வலியை வெல்லும்படி பிசாசை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்! பிறகு நீங்கள் பாதுகாப்பாக மீண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்!” என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.