முதல் போட்டிலேயே பாகிஸ்தானை வீழ்த்த தோனி போட்ட ஸ்கெட்ச் என்ன? தப்பிக்க பாகிஸ்தானின் முயற்சி!
இந்த 2021 உலகக் கோப்பை ஆனது டி 20 தொடரின் முதல் ஆட்டம் இந்திய மற்றும் பாகிஸ்தான். இந்த போட்டியில் இந்திய அணிக்கு மிகவும் பரபரப்பாக இருக்கப்போகிறது.
வரும் 24-ம் திகதியில் நடக்கும் இப்போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி விடலாம் என இந்திய அணி தப்புக்கணக்கு போட முடியாது. ஏனென்றால், பாகிஸ்தான் இந்த முறை வலுவான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
பாகிஸ்தான் அணியில் முதலில் ஆடும் பேட்டிங் அணிக்கு அஸ்திவாரமாக உள்ளது. மறுபக்கம் அந்த அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. பாகிஸ்தானின் 3 முக்கியமான வீரர்களில் ஒருவரான அந்த அணியின் கேம் சேஞ்சர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், ரிஸ்வான், ஹபிஸ் போன்ற வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடியவர்கள்.
அதிலும், பாபர் அசாமின் சமீபத்திய டி 20 ஸ்டிரைக் ரேட் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தேவையான போட்டியில் 40 பந்தில் 90 ரன்னும் அடிக்கிறார், நிதானமாக ஆட வேண்டிய போட்டிகளில் 40 பந்தில் 50 அடித்து சென்சிபிள் இன்னிங்க்ஸும் ஆடுகிறார்.
இதனால், பாபர் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தானின் முக்கிய அஸ்திரமாக இருப்பார். வீழ்த்த தோனி முடிவு எப்படி இருக்கும், என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக பெரும்பாலும் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, சூர்யா குமார் யாதவ், பண்ட், ஜடேஜா, பாண்டியா, ஷமி, வருண், அஸ்வின், பும்ரா ஆகியோர் ஆட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும், அதிக ஸ்பின் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியா பவுலிங் போடாத பட்சத்தில் அஸ்வினுக்கு பதிலாக கூடுதல் பாஸ்ட் பவுலராக ஷர்துல் இறங்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா கண்டிப்பாக 5 பவுலர்களுடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஸ்பின் பவுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, துபாய் பிட்ச் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கும். ஐ.பி.எல் பைனல் இங்குதான் நடைபெற்றது. அதில் இரண்டாவது ஆடிய கொல்கத்தா வென்றது என்றாலும் இங்கு நிலவும் பனிப்பொழிவு இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும்.