சிறு துண்டு மஞ்சள் இருக்கா? சுகருக்கு செலவே இல்லாத சூப்பர் தீர்வு!
நீரிழிவு நோய் உலகளில் பெரும்பாலான மக்கள் தற்போது சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று.
உடலில் ரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரழிவு நோய் ஏற்படுகிறது.
நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத நிலை என்பதால், ஒருவர் தனது உணவை சரியாகக் கவனித்து, எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நீரிழிவு நோயாளிகள், புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சமநிலை உள்ள உணவை எடுத்தக்கொள்வது நல்லது.
சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதிக கலோரி உணவுகளை ஒருவர் தவிர்க்க வேண்டும்.
சிறு துண்டு மஞ்சள் இருக்கா?
அதிலும் பாரம்பரிய மஞ்சள் போன்ற மூலிகைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
குறிப்பாக எளிதில் கிடைக்கும் மஞ்சள் பல்வேறு நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருகிறது.
இதனால் அடிக்கடி மஞ்சள் தேநீர் அருந்துங்கள். ஆனாலும் அளவு என்பது முக்கியம்.
நீரிழிவு நோய்க்கான மஞ்சள் தேநீர்
மஞ்சள் தேநீர் செய்வது எப்படி
நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவில் மஞ்சளைச் சேர்க்க எளிதான மற்றும் பயனுள்ள வழி இருக்கிறது.
ஒரு கப் மஞ்சள் தேநீர் உங்களுக்கு பெரிய நன்மைகளை அளிக்கும்.
இரவில் அரை அங்குல பச்சை மஞ்சளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்.
காலையில் அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வைத்து, அதை வடிகட்டி குடிக்கவும். இதில் கூடுதலாக இஞ்சி மற்றும் கருப்பு மிளகு தேன் ஆகியவற்றை சேர்த்தால், கூடுதல் நன்மை கிடைக்கும்.
இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் தேன் சேர்ப்பதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது இந்த ஆரோக்கியமான மஞ்சள் தேநீரை உங்கள் நீரிழிவு உணவில் சேர்த்து, ஒட்டுமொத்த பலனை அனுபவிக்கவும்.